மோடி பாகிஸ்தானை ஆள வேண்டும் அல்லாவிடம் வேண்டுகிறேன்

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடிநிலவும் சூழலில் அந்நாட்டு இளைஞர் ஒருவர், ‛இந்திய பிரதமர் மோடி பாகிஸ்தானை ஆளவேண்டும்’ என கடவுளிடம் கேட்பதாகவும், அவரால்மட்டுமே இங்குள்ள நிலைமையை சமாளிக்க முடியும் என்றும் கூறியுள்ள வீடியோ வைரலாகியுள்ளது.

நமது அண்டை நாடான பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கிதவித்து வருகிறது. இதனால் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை நிறைவேற்ற பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தப் பட்டுள்ளது. ஒருலிட்டர் பால் விலை ரூ.250க்கு விற்பதனையாகிறது. கோழிஇறைச்சி ஒருகிலோ ரூ.700 முதல் 800 வரை உயர்ந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் கடும் வேதனை யடைந்துள்ளனர்.

இந்த நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த யூடியூபரான சனா அம்ஜத் என்பவர், ஒருஇளைஞரிடம், பாக்., பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் அரசு குறித்து பல்வேறு கேள்விகளை கேட்கிறார். அப்போது அந்நபர் ஷெபாஷ் மீது சரமாரி குற்றச் சாட்டுகளை அடுக்கியதுடன், ‛இந்திய பிரதமர் மோடி பாகிஸ்தானை ஆளவேண்டும்’ என கடவுளிடம் கேட்பதாகவும், அவரால் மட்டுமே இங்குள்ள நிலைமையை சமாளிக்க முடியும் என்றும் கூறுகிறார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அந்த யூடியூபரிடம் பாக்., இளைஞர் பேசியுள்ளதாவது: பாகிஸ்தானில் பிறக்கக்கூடாது என்று விரும்புகிறேன். பாகிஸ்தான் இந்தியா விலிருந்து பிரிக்கப்படாமல் இருக்க விரும்புகிறேன். அப்போதுதான் தக்காளியை கிலோ ரூ.20க்கும், கோழிக்கறியை கிலோ ரூ.150க்கும், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.50க்கும் வாங்குவோம். எங்களுக்கு ஒரு இஸ்லாமிய தேசம் கிடைத்தது துரதிர்ஷ்டவசமானது, ஆனால் இங்கு இஸ்லாத்தை நிறுவமுடியவில்லை. இந்திய பிரதமர் மோடி, நம்மை விட சிறந்தவர். அங்குள்ள மக்கள் மோடியை மதிக்கின்றனர், அவரை பின் தொடர்கின்றனர்.

எங்களுக்கு நரேந்திரமோடி கிடைத்தால், நவாஸ் ஷெரீப்போ, பெனசிரோ, இம்ரானோ, முஷரப்போ தேவைப்படாது. எங்களுக்கு தேவை நரேந்திரமோடி மட்டுமே. அவரால் மட்டுமே நாட்டில் நிலவும் மோசமான நிலைமையை சமாளிக்க முடியும். இந்தியா தற்போது உலக பொருளாதாரத்தில் 5வது இடத்தில் இருக்கிறது.

மோடியின் ஆட்சியின் கீழ் நான் வாழதயார். அவர் ஒரு சிறந்த மனிதர். இந்தியர்களுக்கு தக்காளி, சிக்கன் போன்றவை நியாயமான விலையில் கிடைக்கின்றன. மோடியை நமக்கு (பாகிஸ்தானியர்களுக்கு) கொடுத்து நம் நாட்டை ஆளவேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு கண்ணீருடன் அவர் பேசியுள்ளார். இது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...

முருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ...