இந்தியா – பாகிஸ்தான் இடையே சுமூகமான நட்பு

பிரதமர் நரேந்திரமோடி மேற்கொண்ட நல்லெண்ண முயற்சியின் பலனாக இந்தியா – பாகிஸ்தான் இடையே சுமூகமான நட்பு ஏற்படதொடங்கியது.

இதைத்தொடர்ந்து இருநாட்டு வெளியுறவுத்துறை செயலாளர்களும் ஜனவரி 15–ந்தேதி இஸ்லாமாபாத்தில் சந்தித்துபேச திட்டமிட்டிருந்தனர்.

அந்த பேச்சுவார்த்தையை சீர்குலைக்கும் வகையில் பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானபடை தளம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் திடீர்தாக்குதல் நடத்தினார்கள். இதன் காரணமாக 15–ந் தேதி நடக்க இருந்த பேச்சு வார்த்தையை இந்தியா ரத்துசெய்தது.

இதற்கிடையே தீவிரவாதிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்ஷெரீப் அறிவித்தார். இதைத்தொடர்ந்து பாகிஸ்தானுக்கான புதிய இந்திய தூதர் கவுதம் நேற்று முன்தினம் பாகிஸ்தான் பிரதமரின் தேசியபாதுகாப்பு ஆலோசகர் நசீர்கானை சந்தித்துப் பேசினார்.

அவர்கள் இருவரும் ஜெய்ஷ் – இ – முகம்மது இயக்க தீவிரவாதிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றி விவாதித்தனர். இதைத் தொடர்ந்து மீண்டும் இந்தியா – பாகிஸ்தான் வெளியுறவு துறை செயலாளர்கள் கூட்டத்தை நடத்த முடிவுசெய்யப்பட்டது.

அதன்படி அடுத்தமாதம் (பிப்ரவரி) இஸ்லாமாபாத்தில் இந்தியா – பாகிஸ்தான் அதிகாரிகள் பேச்சு நடைபெற உள்ளது. அதில் இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய்சங்கர், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர் சவுத்திரி இருவரும் பங்கேற்றுபேச உள்ளனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் 3வது பெரிய பொருளாதார நாட� ...

உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது என்ன? சிறு நகர வளர்ச்சிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாட்டிலிருந்து மூன்றாவது பெரிய ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில� ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள் குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் ப� ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி வேண்டுகோள் காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட் ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியை மறந்து விட்டது பாகிஸ்தான் – அமித்ஷா மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு ப� ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள்: திமுக அரசுக்கு பா.ஜ., வலியுறுத்தல் கடந்த 152 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கீரிப்பாறை ...

தவிக்கும் தென் மாவட்ட மக்கள்

தவிக்கும் தென் மாவட்ட மக்கள் ''தாமிரபரணி ஆற்றிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் குடிநீர் மாசுபட்டிருப்பதால் தென் ...

மருத்துவ செய்திகள்

ஆஸ்துமாவை குணமாக்கும் மிளகு

ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ...

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...