இந்தியா – பாகிஸ்தான் இடையே சுமூகமான நட்பு

பிரதமர் நரேந்திரமோடி மேற்கொண்ட நல்லெண்ண முயற்சியின் பலனாக இந்தியா – பாகிஸ்தான் இடையே சுமூகமான நட்பு ஏற்படதொடங்கியது.

இதைத்தொடர்ந்து இருநாட்டு வெளியுறவுத்துறை செயலாளர்களும் ஜனவரி 15–ந்தேதி இஸ்லாமாபாத்தில் சந்தித்துபேச திட்டமிட்டிருந்தனர்.

அந்த பேச்சுவார்த்தையை சீர்குலைக்கும் வகையில் பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானபடை தளம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் திடீர்தாக்குதல் நடத்தினார்கள். இதன் காரணமாக 15–ந் தேதி நடக்க இருந்த பேச்சு வார்த்தையை இந்தியா ரத்துசெய்தது.

இதற்கிடையே தீவிரவாதிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்ஷெரீப் அறிவித்தார். இதைத்தொடர்ந்து பாகிஸ்தானுக்கான புதிய இந்திய தூதர் கவுதம் நேற்று முன்தினம் பாகிஸ்தான் பிரதமரின் தேசியபாதுகாப்பு ஆலோசகர் நசீர்கானை சந்தித்துப் பேசினார்.

அவர்கள் இருவரும் ஜெய்ஷ் – இ – முகம்மது இயக்க தீவிரவாதிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றி விவாதித்தனர். இதைத் தொடர்ந்து மீண்டும் இந்தியா – பாகிஸ்தான் வெளியுறவு துறை செயலாளர்கள் கூட்டத்தை நடத்த முடிவுசெய்யப்பட்டது.

அதன்படி அடுத்தமாதம் (பிப்ரவரி) இஸ்லாமாபாத்தில் இந்தியா – பாகிஸ்தான் அதிகாரிகள் பேச்சு நடைபெற உள்ளது. அதில் இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய்சங்கர், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர் சவுத்திரி இருவரும் பங்கேற்றுபேச உள்ளனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...