இந்த விழாவால், இந்தியாவுக்கு பெருமை சேரும்

ஆன்மிககுரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் "வாழும் கலை' அமைப்பின் உலக கலாசார திருவிழா நிகழ்ச்சியை அரசியலாக்க கூடாது என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்யநாயுடு தெரிவித்தார்.

இது குறித்து சுட்டுரையில் (டுவிட்டர்) அவர் வெள்ளிக்கிழமை தொடர்ச்சியாக வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஏற்பாடுசெய்துள்ள நிகழ்ச்சி, மதம், இனம், மொழி ஆகியவற்றை கடந்து 36 ஆயிரம் கலைஞர்கள் பங்கேற்கும் கலாசார விழா வாகும். இந்த விழாவால், இந்தியாவுக்கு பெருமை சேரும்.

இந்த நிகழ்ச்சிக்காக, யமுனை நதியில் தாற்காலிக மிதவை பாலங்களை அமைக்க ராணுவத்தினர் பயன்படுத்தப் பட்டது மிகவும் விமர்சனத்துக்குள்ளானது. மத்தியில் முந்தைய ஆட்சிக்காலங்களிலும் கும்பமேளா, சங்கராந்தி உள்ளிட்ட மதம்சார்ந்த முக்கிய திரு விழாக்களுக்கான ஏற்பாடுகளின்போது, ராணுவத்தினர் உதவிகளை செய்துள்ளனர் என்பதை நினைவுபடுத்துகிறேன்.

எனவே மிதவைப்பாலங்கள் அமைக்க ராணுவத்தினர் உதவியது குறித்து குற்றம்சாட்டு தேவையற்றதாகும். ஒருநிகழ்ச்சியில் 36,000 கலைஞர்கள் பங்கு கொள்வது என்பதே சாதனையாகும்.

இது, வேற்றுமையில் ஒற்றுமையை கொண்டாடும் நிகழ்ச்சியாகும். இதில் நாம் கலந்துகொள்வோம். இதனால் இந்தியாவுக்குப் பெருமைசேரும். எனவே இதை அரசியலாக்க கூடாது என்று வெங்கய்ய நாயுடு குறிப்பிட்டுள்ளார்.

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...