இந்த விழாவால், இந்தியாவுக்கு பெருமை சேரும்

ஆன்மிககுரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் "வாழும் கலை' அமைப்பின் உலக கலாசார திருவிழா நிகழ்ச்சியை அரசியலாக்க கூடாது என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்யநாயுடு தெரிவித்தார்.

இது குறித்து சுட்டுரையில் (டுவிட்டர்) அவர் வெள்ளிக்கிழமை தொடர்ச்சியாக வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஏற்பாடுசெய்துள்ள நிகழ்ச்சி, மதம், இனம், மொழி ஆகியவற்றை கடந்து 36 ஆயிரம் கலைஞர்கள் பங்கேற்கும் கலாசார விழா வாகும். இந்த விழாவால், இந்தியாவுக்கு பெருமை சேரும்.

இந்த நிகழ்ச்சிக்காக, யமுனை நதியில் தாற்காலிக மிதவை பாலங்களை அமைக்க ராணுவத்தினர் பயன்படுத்தப் பட்டது மிகவும் விமர்சனத்துக்குள்ளானது. மத்தியில் முந்தைய ஆட்சிக்காலங்களிலும் கும்பமேளா, சங்கராந்தி உள்ளிட்ட மதம்சார்ந்த முக்கிய திரு விழாக்களுக்கான ஏற்பாடுகளின்போது, ராணுவத்தினர் உதவிகளை செய்துள்ளனர் என்பதை நினைவுபடுத்துகிறேன்.

எனவே மிதவைப்பாலங்கள் அமைக்க ராணுவத்தினர் உதவியது குறித்து குற்றம்சாட்டு தேவையற்றதாகும். ஒருநிகழ்ச்சியில் 36,000 கலைஞர்கள் பங்கு கொள்வது என்பதே சாதனையாகும்.

இது, வேற்றுமையில் ஒற்றுமையை கொண்டாடும் நிகழ்ச்சியாகும். இதில் நாம் கலந்துகொள்வோம். இதனால் இந்தியாவுக்குப் பெருமைசேரும். எனவே இதை அரசியலாக்க கூடாது என்று வெங்கய்ய நாயுடு குறிப்பிட்டுள்ளார்.

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்த� ...

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தலுக்கு பின் … கூட்டணி ஆட்சி :மதுரை கூட்டத்தில் அமித் ஷா உறுதி மதுரை, ஜூன் 9- ''தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்திருக்கிறார்கள்: அமித் ஷா தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்துக் கொண்டு ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்க ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்காலம்; அமித் ஷா பெருமிதம் பிரதமர் மோடி தலைமையிலான இந்த 11 ஆண்டு கால ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பி ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பிரதமர் மோடி உறுதி ''நல்லாட்சி, மாற்றத்தில் தெளிவான கவனம் செலுத்தப்படுகிறது'' என பிரதமர் ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை � ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மத்திய அரசு மறுவரையறை செய்துள்ளது 'கடந்த 11 ஆண்டுகளில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை, தேசிய ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலை� ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலையீடும் இல்லை; எல்லாம் பிரதமரின் முடிவு ஆபரேஷன் சிந்தூர் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் ...

மருத்துவ செய்திகள்

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...