முதல்-மந்திரி வேட்பாளர் போட்டியில் நான் இல்லை

உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் முதல்-மந்திரி வேட்பாளர் போட்டியில் நான் இல்லை’ என உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் கூறினார்.

 

சமீபத்தில் நடந்துமுடிந்த அசாம் சட்டசபை தேர்தலுக்கு முதல்-மந்திரி வேட்பாளரை முதலிலேயே அறிவித்தது போல, உத்தரபிரதேச தேர்தலுக்கும் முதல்மந்திரி வேட்பாளரை அறிவிக்க கட்சி திட்டமிட்டுள்ளது. அதன்படி கட்சியின் செயற்குழு கூட்டத்தில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப் படுகிறது.

உத்தரபிரதேச முதல்மந்திரி வேட்பாளராக உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், வருண் காந்தி உள்ளிட்டோரின் பெயர்கள் பரிசீலிக்கப்படுவதாக தகவல்கள் வெளியானது. எனினும் ராஜ்நாத் சிங்தான் கட்சியின் முதல்தேர்வு என டெல்லி வட்டாரங்களில் கூறப்படுகிறது. இவர் உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதல்மந்திரி என்பதும் கவனிக்கத்தக்கது.

ஆனால் இந்த தகவல்களை முதலில் மறுத்த ராஜ்நாத் சிங், எனினும் கட்சிவழங்கும் பொறுப்புகளை ஏற்க தயார் என பின்னர் கூறினார். லக்னோ அருகே உள்ள சர்பாக் ரெயில்நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக செயல்படுத்தப்பட்டு உள்ள திட்டங்களை நேற்று தொடங்கிவைத்த அவர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது இதை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘முதல்-மந்திரி வேட்பாளராக நான் அறிவிக்கப் படுவேன் என்று வெளியாகி உள்ள தகவல்கள் அனைத்தும் யூகத்தின் அடிப்படை யிலானது, ஆதாரமற்றது. அப்படி எந்த ஒருபோட்டியிலும் நான் இல்லை. அதேநேரம் கட்சித்தலைமை எனக்கு எந்தபொறுப்பை வழங்கினாலும் அதை விட்டு விட்டு நான் ஓடமாட்டேன்’ என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.