உத்திர பிரதேச மாநிலத்தில் பாஜக முன்னிலை

உத்தர பிரதேசத்தில் மில்கிபூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், 3ம் சுற்று முடிவில் பா.ஜ., வேட்பாளர் சந்திர பானு பஸ்வான் 17,123 ஓட்டுக்கள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

உத்தர பிரதேசத்தில் மில்கிபூர் சட்டசபை தொகுதிக்கு பிப்.,5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் 64.02 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இந்த தேர்தலில், பா.ஜ., சார்பில் சந்திரபானு பஸ்வான், சமாஜ்வாதி சார்பில், அஜித் பிரசாத் உட்பட 10 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

ஆனால் அனைவரது கவனமும், பா.ஜ., மற்றும் சமாஜ்வாதி வேட்பாளர்கள் மீது தான் இருந்தது. இந்த தொகுதியில் பதிவான ஓட்டுக்களை எண்ணும் பணி இன்று (பிப்.,08) காலை 8 மணி துவங்கி நடந்து வருகிறது.

மொத்தம் 30 சுற்றுகளாக ஓட்டுக்கள் எண்ணப்பட உள்ளன. முதல் சுற்று முடிவில் பா.ஜ., வேட்பாளர் சந்திர பானு பஸ்வான் 17,123 ஓட்டுக்கள் பெற்று முன்னிலையில் உள்ளார். 2ம் இடத்தில் உள்ள சமாஜ்வாதி வேட்பாளர் 7 ஆயிரம் ஓட்டுக்கள் பெற்றுள்ளார்.

முதல் இடத்தில் இருக்கும் பா.ஜ., வேட்பாளர், 2ம் இடத்தில் உள்ள சமாஜ்வாதி வேட்பாளரை விட 10,123 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

இந்த தொகுதி, அயோத்தி பார்லிமென்ட் தொகுதிக்கு உட்பட்டதாகும். அயோத்தி பார்லிமென்ட் தொகுதியில், கடந்த லோக்சபா தேர்தலில் சமாஜ்வாதிவேட்பாளர் அவதேஷ் பிரசாத் வெற்றி பெற்றார். அவரது மகனைத் தான் இந்த தேர்தலில் சமாஜ்வாதி களம் இறக்கியது.

கடந்த சட்டசபை தேர்தலில் இந்த தொகுதி சமாஜ்வாதியின் அவதேஷ் பிரசாத் வெற்றி பெற்ற தொகுதியாகும். அவர் கடந்த லோக்சபா தேர்தலில் சமாஜ்வாதி சார்பில், அயோத்தி உள்ளடங்கிய பைசாபாத் எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தன் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். அதன் தொடர்ச்சியாகவே இந்த இடைத் தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்க ...

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்களை வரவேற்போம்!! தமிழக மக்களிடம் முருக பக்தர்கள் மாநாட்டிற்கான ஆதரவு பல்கி ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தம ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தமிழக அரசு: நயினார் நகேந்திரன் குற்றச்சாட்டு மாம்பழ விவசாயிகள் வயிற்றில் அடிக்காமல், கொள்முதல் விலையை உயர்த்த ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்கா ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்காட்சிக்கு அறுபடை வீடுகளில் இருந்து வந்த வேல் மதுரை, வண்டியூர் டோல் கேட் அருகே ஜூன், 22ல் ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவ ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவை மாறிவருவது ஏன்: நயினார் நாகேந்திரன் கேள்வி கோவை பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறிவருவது ஏன்? என தமிழக ...

கோவில் சிலைகள் பாதுகாப்பு கேள் ...

கோவில் சிலைகள் பாதுகாப்பு கேள்விக்குறியானது ஏன்? – நயினார் நாகேந்திரன் கோவை சின்னியம்பாளையத்தில் பிளேக் மாரியம்மன் கோவில் சிலைகளை, மர்ம ...

காவலர்களுக்கு பதவி உயர்வு அரசா ...

காவலர்களுக்கு பதவி உயர்வு அரசாணை: முதல்வருக்கு நயினார் நகேந்திரன் வலியுறுத்தல் 2011-ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்த காவலர்களுக்கு, சிறப்பு ...

மருத்துவ செய்திகள்

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...