பஹல்காம் விவகாரத்தில் நீங்கள் எதிர்பார்த்தபடி பிரதமர் மோடியின் நடவடிக்கை இருக்கும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி அளித்துள்ளார்.
டில்லியில் சமஸ்கிருத ஜாக்ரன் மஹோத்சவ நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அப்போது கூறியதாவது;
பிரதமரின் செயல்பாடுகள், திறமை, உறுதி மற்றும் விடாமுயற்சியை நீங்கள் நன்றாக அறிவீர்கள். எனவே நீங்கள் எதிர்பார்ப்பது நடக்கும் என்று உங்களுக்கு உறுதியளிக்க நான் விரும்புகிறேன்.
ஒரு பாதுகாப்பு அமைச்சராக நமது நாட்டை தாக்க துணிந்தவர்களுக்கு தகுந்த பதிலடி வழங்குவது எனது பொறுப்பு. ஒரு பாதுகாப்பு அமைச்சராக எனது வீரர்களுடன் சேர்ந்து நாட்டின் எல்லைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதும் எனது பொறுப்பு.
இவ்வாறு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ... |
இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ... |
அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ... |