மக்களோடு மக்களாக யோகா செய்தார் மோடி

சர்வதேச யோகாதினம் இன்று ஜூன் 21-ம்தேதி உலகெங்கும் கொண்டாடப் படுகிறது. இன்று காலை சண்டிகரில் நடந்த யோகா நிகழ்வில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்றார். பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று, ஜூன் 21-ந் தேதியை சர்வதேச யோகாதினமாக ஐ.நா. பொதுச்சபை கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்தது.
 
கடந்த ஆண்டு, முதலாவது சர்வதேச யோகா தினம் கொண்டாடபட்டது. இந்தியா மட்டுமின்றி, உலகின் பலநாடுகளிலும் அன்றைய தினம் யோகா பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
 
இன்று 2-வது ஆண்டாக சர்வதேச யோகாதினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டும், இந்தியா உள்பட 135-க்கும் மேற்பட்ட நாடுகளில் யோகாபயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் யோகா பயிற்சி நடைபெறுகிறது. அதை குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி தொடங்கி வைக்கிறார்.
 
கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும் பிரதமர் மோடி, பொதுமக்களுடன் யோகா பயிற்சியில் ஈடுபட்டார். அவர் பங்கேற்கும் நிகழ்ச்சி, சண்டி காரில் நடைபெற்றது. அதில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப் படுகிறது. முதல் முறையாக, 150 மாற்றுத் திறனாளிகளும் கலந்து கொண்டனர். காலை 7 மணிக்கு தொடங்கிய பயிற்சி, 7.45 மணிக்கு முடிவடைந்தது.
 
5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புபணியில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்று, சிறப்பாக ஆசனம் செய்பவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.8 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.5 ஆயிரமும் வழங்கப் படுகிறது. எனவே, பங்கேற்பாளர்கள், தாங்கள் யோகாசெய்வதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடலாம்.
 
‘செல்பி' எடுப்பதற்கான வசதியும் செய்யப் பட்டுள்ளது. டெல்லி கன்னாட்பிளேஸ் பகுதியில், மத்திய அரசும், டெல்லி மாநகராட்சியும் பிரமாண்ட யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடுசெய்துள்ளன. நாடுமுழுவதும் நடக்கும் யோகா பயிற்சிகளில், பதஞ்சலி யோகா பீடம், வாழும்கலை அறக்கட்டளை, பிரஜாபிதா பிரம்ம குமாரி ஐஸ்வரிய வித்யாலயா போன்ற அமைப்புகளின் தன்னார்வதொண்டர்கள், மத்திய துணை ராணுவப்படையினர்,
 
முக்கிய பிரமுகர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கலந்து கொள்கிறார்கள். இது தவிர, உலகம் முழுவதும் 173 இந்திய தூதரகங்கள், யோகாகுறித்த விழிப்புணர்ச்சியை பரப்ப யோகா பயிற்சிக்கு ஏற்பாடுசெய்துள்ளன. சர்வதேச யோகா தின கொண்டாட்டத்துக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், ...

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், பிகார், உ.பி., செல்லும் மோடி பிரதமர் நரேந்திர மோடி மே 29, 30 அகிய ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து வி� ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் சரியான பதிலடி – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் சிக்கிம், மேற்கு ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலும� ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை” – பிரதமர் மோடி மாவோயிஸ்ட் வன்முறை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான � ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சியை பாராட்டிய பிரதமர் மோடி ஐ.பி.எல் தொடரில் அனைவராலும் பாராட்டு பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு.க. அரசு முடிவு; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு பஸ் கட்டணத்தையும் உயர்த்தி முடிந்தவரை கொள்ளையடிக்க தி.மு.க. அரசு ...

மருத்துவ செய்திகள்

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...