திருநங்கை பாதுகாப்பு மசோதா மத்திய அமைச்சரவை ஒப்புதல்

திருநங்கை பாதுகாப்புமசோதா (2016) என்ற புதிய சட்ட முன் வரைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன் கிழமை நடை பெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கபட்டது.

இந்தமசோதாவின் மூலம் திருநங்கைகளின் சமூக, பொருளாதார மற்றும் கல்விமேம்பாடு உறுதி செய்யப்படும் என்று மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது குறித்து மத்திய அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ஆண் அல்லது பெண் என்ற யதார்த்தபாலின வரையறையில் இல்லாத காரணத்தினால் சமூகத்தில் மிகவும் புறக்கணிக்கப்பட்ட மக்களாக திரு நங்கையர்கள் உள்ளனர். கல்வி உரிமைமறுப்பு, வேலைவாய்ப் பின்மை, மருத்துவ சிகிச்சை குறைபாடுபோன்ற விஷயங்களாலும் திருநங்கையர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், தற்போது அறிமுகம் செய்யப் பட்டுள்ள புதிய மசோதாவின் மூலம் ஏராளமான திருநங்கையர்கள் பலன்அடைவர். சமூகத்தின் விளிம்புநிலையில் உள்ள அந்தமக்களுக்கு எதிரான பாகுபாடு மற்றும் அத்துமீறல்களை தடுத்து அவர்களையும் பொதுசமூகத்தில் கலக்கச்செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பினாமி பரிவர்த்தனை தடை சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்வதற்கும் மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

பினாமி சொத்துக்களை தடுக்கவும், நியாயத்துக்கு புறம்பான நடவடிக்கைகளின் மூலம் சட்டவிதிகளை வளைத்து பினாமி சொத்துக்களை வசப்படுத்தி கொள்வதைத்தடுக்கவும் புதிய சட்டத்திருத்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...