நாடு முழுவதும் ஒவ்வொரு பிரிவினருக்கும் பள்ளி கல்வி வழங்கப்படும் – பிரதமர் மோடி

”நாடு முழுதும் 85 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் திறக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பிரிவினருக்கும் பள்ளிக் கல்வியை வழங்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நாடு முழுதும் மத்திய அரசால் நடத்தப்படும் 85 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அமைக்கவும், ஏற்கனவே இருக்கும் பள்ளிகளின் நிலையை மேம்படுத்தவும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த எட்டு ஆண்டுகளில் இந்த பணிகளை முடிக்க, 5,872.08 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி, தன் சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது:

பள்ளிக்கல்வியை அனைத்து சமூகத்தினரும் எளிதில் அணுகக்கூடிய வகையில், மிகப்பெரிய முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. அதன்படி, நாடு முழுதும் 85 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் திறக்கப்படும். இதனால், ஏராளமான மாணவர்கள் பயனடைவர். இதன் வாயிலாக புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

தேசிய கல்விக் கொள்கையின்படி, நம் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் பள்ளிக்கல்வியை அளிக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.அதன் ஒரு பகுதியாக, நாடு முழுதும் 28 நவோதயா பள்ளிகளை துவங்கவும் நம் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது உறைவிடப் பள்ளி மற்றும் தரமான பள்ளிக்கல்வியை மிகப்பெரிய அளவில் விரிவுபடுத்தும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தரமான கல்வி புதிய கேந்திரிய வித்யாலயா திறப்பு குறித்து அரசு வெளியிட்டுள்ள குறிப்பில், ‘நாடு முழுதும் திறக்கப்படவுள்ள புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் வாயிலாக 82,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு குறைந்த செலவில், தரமான கல்வி வழங்கப்படும்.

தற்போது நாட்டில் 1,256 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், மாஸ்கோ, காத்மாண்டு, டெஹ்ரான் என மூன்று பள்ளிகள் வெளிநாட்டு நகரங்களில் உள்ளன. இங்கு 13.56 லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

மருத்துவ செய்திகள்

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...