தேச பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்ள முடியாது

காஷ்மீரில் தற்போது நிலவும் பதற்றமான சூழ்நிலைகுறித்து விவாதிக்க நாளை (12-ம் தேதி) அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மாநிலங் களவையில் நேற்று தெரிவித்தார்.

காஷ்மீரில் கடந்த ஜூலை 8-ம் தேதி ஹில்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் தளபதி புர்ஹான் வானி பாதுகாப்புப் படை யினரால் சுட்டுக் கொல்லப்பட்டான். இதைத் தொடர்ந்து கடந்த 33 நாட் களாக நடந்துவரும் கல்வீச்சு போராட்டங்கள், வன்முறை காரணமாக இது வரை 55-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிக்கவேண்டும் என நேற்று முன்தினம் மாநிலங்களவையில் எதிர்க் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதனை அரசு ஏற்றுக் கொண்டது.நேற்று இதுதொடர்பான விவாதம் மாநிலங்களவை பூஜ்ஜியநேரத்தில் எடுத்து கொள்ளப்பட் டது. சுமார் 6 மணிநேரம் இது தொடர்பான விவாதம் நடந்தது.

உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துப்பேசிய உள் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், “காஷ்மீரை ராணுவத்தின் வசம் ஒப்படைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. காஷ்மீரில் நடைபெற்றுவரும் வன்முறையால் 4515 பாதுகாப்பு படையினரும், 3,356 குடிமக்களும் காயமடைந்துள்ளனர். காஷ்மீரில் நடைபெற்றுவரும் சம்பவங்கள் அனைத்தும் பாகிஸ்தானால் தூண்டப் பட்டவை. காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள் அங்குள்ள மக்களை கடந்த ஜூலை 9-ம் தேதி முதல் தூண்டிவிட்டு வருகின்றனர்.

காஷ்மீருக்கு அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் அடங்கியகுழு அனுப்பி வைக்கப்படும். வரும் வெள்ளிக்கிழமை இவ்விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக்கூட்டம் நடைபெறும். இதில் பிரதமர் மோடி பங்கேற்பார். தேச பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்ள முடியாது. பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷங்களை இந்திய மண்ணில் அனுமதிக்க முடியாது. எந்தவொரு சக்தியாலும் காஷ்மீரை நம்மிடமிருந்து பறிக்கமுடியாது” என்றார்.

இறுதியில், “காஷ்மீர் பள்ளத் தாக்கில் தொடர்ந்து நீடிக்கும் கொந்தளிப்பான நிலை, வன்முறை, ஊரடங்கு உத்தரவு ஆகியவை தொடர்பாக இந்த அவை மிகுந்த கவலை கொண்டுள்ளது” என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...