நரேந்திரமோடி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரை சீன வெளியுறவுத்துறை அமைச்சர் சந்தித்துப் பேசினார்

தில்லியில் பிரதமர் நரேந்திரமோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரை சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ சனிக்கிழமை சந்தித்துப் பேசினார்.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:

பிரதமர் நரேந்திரமோடி, வாங் யீ இடையேயான சந்திப்பு 20 நிமிடம் நடைபெற்றது. பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனைநடத்தினர். அப்போது சீனாவில் வரும் செப்டம்பர்மாதம் நடைபெற இருக்கும் ஜி-20 அமைப்பின்மாநாடு குறித்து வாங் யீ தெரிவித்தார். இதற்கு சீன அதிபருக்கு தனது வாழ்த்துகளை தெரிவிக்கும்படி பிரதமர் கேட்டுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து, சுஷ்மா ஸ்வராஜை வாங் யீ சந்தித்துப்பேசினார். 3 மணிநேரம் வரை நீடித்த இந்தச்சந்திப்பில், என்எஸ்ஜி விவகாரம், மசூத் அஸாத் விவகாரம் ஆகியவற்றை சுஷ்மா ஸ்வராஜ் எழுப்பினார். மேலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா மேற்கொண்டுவரும் பொருளாதார முனைய பணிகளுக்கு இந்தியாவின் கவலையை சுஷ்மாஸ்வராஜ் தெரிவித்தார்.

மேற்கண்ட பிரச்னைகளுக்கு தீர்வுகாணும் வகையில், சீனாவுடன் எத்தகைய தொழில்நுட்ப விவகாரங்கள் குறித்தும் பேசத்தயாராக இருப்பதாக வாங்யீயிடம் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு உறவுகளில் பல்வேறு அம்சங்கள் குறித்து வெளியுறவுச்செயலர்கள் நிலையில் பேச்சு வார்த்தை நடத்தும் புதிய நடைமுறையை கடைப்பிடிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

இந்தச்சந்திப்பின்போது, தென் சீனக்கடல் பிரச்னை தொடர்பாக ஆலோசனை நடத்தப்படவில்லை. பேச்சுவார்த்தையின்போது இருதரப்பு விவகாரங்கள், உலகஅரசியல் நிலவரம் ஆகியவற்றுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக இந்தப்பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமானதாகவும், பயனுள்ளதாகவும், வெளிப்படையானதாகவும் அமைந்திருந்தது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...