ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

 சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் பெறுவதற்கும், தாது பலம் அதிகரித்து நல்ல ஆண்மை பெற்றுச் சிறப்பதற்கும் இது நல்ல மருந்தாகும்.

இதன் இலைகளைக் கொண்டு வந்து நன்கு சுத்தம் செய்து, அம்மியை நன்கு கழுவி அதில் வைத்து அரைத்து வைத்துக் கொண்டு, சிறிய கொட்டைப்பாக்களவு எடுத்து, வெள்ளாட்டுப் பாலில் கலக்கி அதன்பின்னர் வடிகட்டிக் கொடுக்க வேண்டும்.

சகலவிதமான விஷங்களினால் ஏற்பட்ட பாதிப்புகள் தீரும். பிளவை, படும்புண், குஷ்டம் இவை குணமாகும்.

அரணை கடித்தால் பிழைக்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. அரணை கடித்தவுடன் மேற்சொன்ன முறையில் கொடுத்தால் பிழைக்க வைத்து விடலாம்.

குஷ்டம் எவ்வளவு கடுமையாக இருந்தாலும், தொடர்ந்து காலை வேளையில் நாற்பத்தெட்டு தினங்கள் கொடுத்து வர நிச்சயம் குணம் கிடைக்கும்.

இவ்விதம் உட்கொள்ளும்போது மிளகைப் பசும்பாலிட்டு அரைத்துத் தலையில் தேய்த்துக் குளிக்க வேண்டும். இவ்விதம் உட்கொள்ளும்போது நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்கக்கூடாது; உடலுறவு கூடாது. கடுகு போட்டுத் தாளித்து அந்த உணவுப் பொருளை உண்ணக்கூடாது.

இந்த இலைகளை நன்கு நிழலில் காய வைத்து 50 கிராம் அளவு எடுத்து இரண்டு டம்ளர் தண்ணீர் வைத்து நன்கு கொதிக்க வைத்து ஒரு டம்ளர் கஷாயமாக்கி வடிகட்டி இரண்டு முறை கொடுக்க நன்கு பேதியாகும். வயிற்றிலுள்ள கிருமிகள் வெளியாகும்.

இதன் வேரைச் சுத்தம் செய்து நன்கு காய வைத்து இடித்துச் சூரணமாக்கி வைத்துக் கொண்டு அரைத் தேக்கரண்டி அளவு எடுத்து கொதிக்கின்ற வெந்நீர் ஒரு டம்ளர் எடுத்து அதிலிட்டு மூடி வைத்துவிட வேண்டும். அரைமணி நேரம் சென்ற பின்னர் வடிகட்டிக் குடித்து வந்தால் கடுமையான காய்ச்சல் குணமாகும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...