ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

 சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் பெறுவதற்கும், தாது பலம் அதிகரித்து நல்ல ஆண்மை பெற்றுச் சிறப்பதற்கும் இது நல்ல மருந்தாகும்.

இதன் இலைகளைக் கொண்டு வந்து நன்கு சுத்தம் செய்து, அம்மியை நன்கு கழுவி அதில் வைத்து அரைத்து வைத்துக் கொண்டு, சிறிய கொட்டைப்பாக்களவு எடுத்து, வெள்ளாட்டுப் பாலில் கலக்கி அதன்பின்னர் வடிகட்டிக் கொடுக்க வேண்டும்.

சகலவிதமான விஷங்களினால் ஏற்பட்ட பாதிப்புகள் தீரும். பிளவை, படும்புண், குஷ்டம் இவை குணமாகும்.

அரணை கடித்தால் பிழைக்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. அரணை கடித்தவுடன் மேற்சொன்ன முறையில் கொடுத்தால் பிழைக்க வைத்து விடலாம்.

குஷ்டம் எவ்வளவு கடுமையாக இருந்தாலும், தொடர்ந்து காலை வேளையில் நாற்பத்தெட்டு தினங்கள் கொடுத்து வர நிச்சயம் குணம் கிடைக்கும்.

இவ்விதம் உட்கொள்ளும்போது மிளகைப் பசும்பாலிட்டு அரைத்துத் தலையில் தேய்த்துக் குளிக்க வேண்டும். இவ்விதம் உட்கொள்ளும்போது நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்கக்கூடாது; உடலுறவு கூடாது. கடுகு போட்டுத் தாளித்து அந்த உணவுப் பொருளை உண்ணக்கூடாது.

இந்த இலைகளை நன்கு நிழலில் காய வைத்து 50 கிராம் அளவு எடுத்து இரண்டு டம்ளர் தண்ணீர் வைத்து நன்கு கொதிக்க வைத்து ஒரு டம்ளர் கஷாயமாக்கி வடிகட்டி இரண்டு முறை கொடுக்க நன்கு பேதியாகும். வயிற்றிலுள்ள கிருமிகள் வெளியாகும்.

இதன் வேரைச் சுத்தம் செய்து நன்கு காய வைத்து இடித்துச் சூரணமாக்கி வைத்துக் கொண்டு அரைத் தேக்கரண்டி அளவு எடுத்து கொதிக்கின்ற வெந்நீர் ஒரு டம்ளர் எடுத்து அதிலிட்டு மூடி வைத்துவிட வேண்டும். அரைமணி நேரம் சென்ற பின்னர் வடிகட்டிக் குடித்து வந்தால் கடுமையான காய்ச்சல் குணமாகும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப் பள்ளியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட ...

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர் எஸ் ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இரு ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைதுசெய்யுங்கள் வடமாநில தொழிலாளர் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோவை ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மா ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு ...

வடமாநிலதவர்கள் மீதான வெறுப்பு ...

வடமாநிலதவர்கள் மீதான  வெறுப்புப் பிரச்சாரத்தை அனுமதிக்கமாட்டோம் தமிழகத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடப்பதாக, ...

மருத்துவ செய்திகள்

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...

தும்பையின் மருத்துவக் குணம்

தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ...