சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் பெறுவதற்கும், தாது பலம் அதிகரித்து நல்ல ஆண்மை பெற்றுச் சிறப்பதற்கும் இது நல்ல மருந்தாகும்.
இதன் இலைகளைக் கொண்டு வந்து நன்கு சுத்தம் செய்து, அம்மியை நன்கு கழுவி அதில் வைத்து அரைத்து வைத்துக் கொண்டு, சிறிய கொட்டைப்பாக்களவு எடுத்து, வெள்ளாட்டுப் பாலில் கலக்கி அதன்பின்னர் வடிகட்டிக் கொடுக்க வேண்டும்.
சகலவிதமான விஷங்களினால் ஏற்பட்ட பாதிப்புகள் தீரும். பிளவை, படும்புண், குஷ்டம் இவை குணமாகும்.
அரணை கடித்தால் பிழைக்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. அரணை கடித்தவுடன் மேற்சொன்ன முறையில் கொடுத்தால் பிழைக்க வைத்து விடலாம்.
குஷ்டம் எவ்வளவு கடுமையாக இருந்தாலும், தொடர்ந்து காலை வேளையில் நாற்பத்தெட்டு தினங்கள் கொடுத்து வர நிச்சயம் குணம் கிடைக்கும்.
இவ்விதம் உட்கொள்ளும்போது மிளகைப் பசும்பாலிட்டு அரைத்துத் தலையில் தேய்த்துக் குளிக்க வேண்டும். இவ்விதம் உட்கொள்ளும்போது நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்கக்கூடாது; உடலுறவு கூடாது. கடுகு போட்டுத் தாளித்து அந்த உணவுப் பொருளை உண்ணக்கூடாது.
இந்த இலைகளை நன்கு நிழலில் காய வைத்து 50 கிராம் அளவு எடுத்து இரண்டு டம்ளர் தண்ணீர் வைத்து நன்கு கொதிக்க வைத்து ஒரு டம்ளர் கஷாயமாக்கி வடிகட்டி இரண்டு முறை கொடுக்க நன்கு பேதியாகும். வயிற்றிலுள்ள கிருமிகள் வெளியாகும்.
இதன் வேரைச் சுத்தம் செய்து நன்கு காய வைத்து இடித்துச் சூரணமாக்கி வைத்துக் கொண்டு அரைத் தேக்கரண்டி அளவு எடுத்து கொதிக்கின்ற வெந்நீர் ஒரு டம்ளர் எடுத்து அதிலிட்டு மூடி வைத்துவிட வேண்டும். அரைமணி நேரம் சென்ற பின்னர் வடிகட்டிக் குடித்து வந்தால் கடுமையான காய்ச்சல் குணமாகும்.
வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ... |
உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ... |
பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.