ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

 சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் பெறுவதற்கும், தாது பலம் அதிகரித்து நல்ல ஆண்மை பெற்றுச் சிறப்பதற்கும் இது நல்ல மருந்தாகும்.

இதன் இலைகளைக் கொண்டு வந்து நன்கு சுத்தம் செய்து, அம்மியை நன்கு கழுவி அதில் வைத்து அரைத்து வைத்துக் கொண்டு, சிறிய கொட்டைப்பாக்களவு எடுத்து, வெள்ளாட்டுப் பாலில் கலக்கி அதன்பின்னர் வடிகட்டிக் கொடுக்க வேண்டும்.

சகலவிதமான விஷங்களினால் ஏற்பட்ட பாதிப்புகள் தீரும். பிளவை, படும்புண், குஷ்டம் இவை குணமாகும்.

அரணை கடித்தால் பிழைக்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. அரணை கடித்தவுடன் மேற்சொன்ன முறையில் கொடுத்தால் பிழைக்க வைத்து விடலாம்.

குஷ்டம் எவ்வளவு கடுமையாக இருந்தாலும், தொடர்ந்து காலை வேளையில் நாற்பத்தெட்டு தினங்கள் கொடுத்து வர நிச்சயம் குணம் கிடைக்கும்.

இவ்விதம் உட்கொள்ளும்போது மிளகைப் பசும்பாலிட்டு அரைத்துத் தலையில் தேய்த்துக் குளிக்க வேண்டும். இவ்விதம் உட்கொள்ளும்போது நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்கக்கூடாது; உடலுறவு கூடாது. கடுகு போட்டுத் தாளித்து அந்த உணவுப் பொருளை உண்ணக்கூடாது.

இந்த இலைகளை நன்கு நிழலில் காய வைத்து 50 கிராம் அளவு எடுத்து இரண்டு டம்ளர் தண்ணீர் வைத்து நன்கு கொதிக்க வைத்து ஒரு டம்ளர் கஷாயமாக்கி வடிகட்டி இரண்டு முறை கொடுக்க நன்கு பேதியாகும். வயிற்றிலுள்ள கிருமிகள் வெளியாகும்.

இதன் வேரைச் சுத்தம் செய்து நன்கு காய வைத்து இடித்துச் சூரணமாக்கி வைத்துக் கொண்டு அரைத் தேக்கரண்டி அளவு எடுத்து கொதிக்கின்ற வெந்நீர் ஒரு டம்ளர் எடுத்து அதிலிட்டு மூடி வைத்துவிட வேண்டும். அரைமணி நேரம் சென்ற பின்னர் வடிகட்டிக் குடித்து வந்தால் கடுமையான காய்ச்சல் குணமாகும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பி ...

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பிரதமர் மோடி மேற்கு ஆசியா மற்​றும் உக்​ரைன் போர்​களுக்கு விரைவில் முடிவு ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இர ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; -இந்திய ஷியா பிரிவு முஸ்லீம் தலைவர். "இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; இறந்தவர்கள் நம் தலைவர்கள் அல்ல"- ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சிய ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சியினை கொடுத்த ஈரான் ஈரானின் செயல்பாடுகள் விபரீதமாக உள்ளன, யாரும் எதிர்பாராதபடி துருக்கியினை ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா அமித்ஷாவின் ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையி ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான அரசுக்கு காங்கிரஸ் பாடமெடுப்பதெல்லாம் நகைப்புக்குரியது. ஈரனின் ஐஆர்ஐஎஸ் தேனா போர்கப்பல் இந்தியாவின் கடற்கரையிலிருந்து 200 ...

வெளியுறவுக் கொள்கை காலாவதியான ...

வெளியுறவுக் கொள்கை   காலாவதியான காங்கிரஸின் சித்தாந்தங்களால் அல்ல “இந்தியா கண்மூடித்தனமாக ஈரான் பக்கம் நிற்க வேண்டும் என்று ...

மருத்துவ செய்திகள்

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...