தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீன பிரதிநிதிகளை சந்தித்து மோடியின் அமைதி திட்டத்தின் மூலம் உறவை மேம்படுத்த உறுதிப்பாடு

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன பிரதிநிதிகளை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கு இடையே பதற்றத்தை தணிக்கவும், உறவு மேம்படுத்தும் என்கின்றார்  அரசியல் நிபுணர்கள்.

இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ள ‘பிரிக்ஸ்’ அமைப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மூன்று நாள் கூட்டம், ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடந்தது. இதில் பங்கேற்ற நமது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீயை சந்தித்து சிறிது நேரம் பேசினார்.

மாநாட்டுக்கு இடையே இருவரும் இன்று தனியாக சந்தித்து, இரு தரப்பு உறவுகள் உள்ளிட்டவை குறித்து பேசினார். அப்போது, இரு நாட்டுக்கும் இடையேயான எல்லை பிரச்னை மற்றும் எல்லையில் உள்ள படைகளை திரும்பப் பெறுவது உள்ளிட்டவை குறித்து வலியுறுத்தி உள்ளார்.

இந்தியா-சீனா உறவு இருதரப்பு உறவை மேம்படுத்துவது, உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இரு அதிகாரிகளும் ஒப்புக்கொண்டனர். இந்தியா-சீனா உறவுகளை மீண்டும் கட்டியெழுப்புதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து, எல்லை பிரச்னைகளுக்கு முன்கூட்டியே தீர்வு காண்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டை இரு தரப்பும் மீண்டும் உறுதிப்படுத்தியது.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள மாளிகையில் ரஷிய அதிபர் புடினை அஜித் தோவல் சந்தித்தார். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும், பரஸ்பர நலன்சார்ந்த சர்வதேச விவகாரங்கள் குறித்தும் இருவரும் ஆலோசித்தனர்.

சமீபத்தில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் பேசிய பிரதமர் மோடி, தற்போது நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான மோடியின் அமைதித் திட்டத்தை, அஜித் தோவல் வழங்கியுள்ளார் என்றும், அது பற்றி விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடு ...

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது -நிதின் கட்கரி '' அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட் ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட்டம் அமித் ஷா குற்றச்சாட்டு ஸ்ரீநகர்: ''காங்கிரஸ் கட்சியும், ராகுலும், ஜம்மு காஷ்மீரை மீண்டும் ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீ ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார் மத்திய பட்ஜெட் 2024-25 அறிவிப்பைத்தொடர்ந்து, மத்திய நிதி பெருநிறுவனங்கள் ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியல ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியலால் பழங்குடியினருக்கு அச்சுறுத்தல் -மோடி  பேச்சு ஜாம்ஷெட்பூர்: ''ஜார்க்கண்டில் ஓட்டு வங்கி அரசியலுக்காக, வங்கதேசம் மற்றும் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரச ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரசு தீவிரம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சி காலத்தில், ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற கன்றுக்கு பிரதமர் தீபஜோதி என பெயரிட்டு மகிழ்ச்சி பிரதமர் மோடியின் இல்லம், டில்லியில் எண் 7 லோக் ...

மருத்துவ செய்திகள்

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.