சவுதி அரேபியா; செப்டம்பர், 25க்குள் நாடுதிரும்பினால், இலவசமாக அழைத்துவரப்படுவர்

சவுதி அரேபியாவில், வேலையின்றி தவிக்கும் இந்தியர்கள், செப்டம்பர், 25க்குள் நாடுதிரும்பினால், இலவசமாக, விமானத்தில் அழைத்துவரப்படுவர்,'' என, வெளியுறவு அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.

 

சர்வதேச சந்தையில் கச்சாஎண்ணெய் விலை வீழ்ச்சியால், எண்ணெய்வளமிக்க நாடான சவுதி அரேபியாவில், பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சிக்கன நடவடிக்கைகளை, அந்தநாட்டு அரசு முடுக்கி விட்டு உள்ளது.


இத்தகைய அதிரடி மாற்றங்களால், ஆயிரக்கணக்கான இந்தியதொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர். அவர்கள் வேலைசெய்த நிறுவனங்களில் சம்பளபாக்கி இருப்பதால், அதை பெறும் வரை, அங்கேயே இருக்கப்போவதாக கூறி வருகின்றனர். நாட்கள் செல்லச்செல்ல, நிலைமை மேலும் மோசமாகக்கூடும் என்பதால், இந்தியத் தொழிலாளர்கள் உடனடியாக தாயகம்திரும்ப வேண்டுமென, மத்திய அரசு விரும்புகிறது.

இதுதொடர்பாக, வெளியுறவு இணையமைச்சர், வி.கே.சிங், சமீபத்தில், சவுதி அரேபியாசென்று திரும்பினார். அங்குள்ள இந்திய தொழிலாளர்களுக்கு, மத்திய அரசு சார்பில், உணவு,இருப்பிடவசதி ஏற்பாடு செய்து தரப்பட்டது.

நிலுவை தொகை: இந்நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளதாவது: தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கி வைத்துள்ள நிறுவனங்களுடன்,சவுதி அரேபியஅரசு பேச்சு நடத்திவருகிறது. பிரச்னை தீர்ந்ததும், தொழிலாளர்களுக்கு சேரவேண்டிய நிலுவைத்தொகை கிடைக்கும்.

வரும், செப்டம்பர், 25க்குள் இந்தியாதிரும்பும் தொழிலாளர்கள், எவ்வித கட்டணமுமின்றி, விமானம் மூலம் திரும்புவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்யும். அதற்குபின் இந்தியா வருவோர், அனைத்து செலவுகளையும், அவர்களே ஏற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...