இந்தியா – எகிப்து இடையேயான பாதுகாப்பு உறவில் கூடுதல் ஒத்துழைப்பு

உலகநாடுகள் அனைத்துக்கும் பெரும் அச்சுறுத்தலாக உருவாகியுள்ள பயங்கர வாதத்தை முறியடிக்க இந்தியா – எகிப்து இடையேயான பாதுகாப்பு உறவில் கூடுதல்ஒத்துழைப்பை ஏற்படுத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது.

எகிப்து அதிபர் அப்தெல் ஃபட்டா அல்-சிஸி, இந்தியாவுக்கு அரசு முறைப்பயணமாக வியாழக்கிழமை வருகை தந்தார். மூன்று நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இந்தியா வந்துள்ள அல்-சிஸி, பிரதமர் நரேந்திரமோடியை தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்தார்.

அப்போது, இந்தியா – எகிப்து இடையேயான வர்த்தக மற்றும் கலாசார உறவுகள் குறித்தும், பாதுகாப்புவிவகாரங்கள் குறித்தும் இருநாட்டுத் தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். மேலும், பயங்கரவாதத்தை எதிர்கொள்ளத் தேவையான ஒத்துழைப்பு நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பேச்சுவார்த்தையை அடுத்து, இருநாட்டுத் தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள எகிப்து அதிபர் அல்-சிஸியை நாட்டின் 125 கோடி மக்கள் சார்பில் வரவேற்கிறேன். அவருடான சந்திப்பு மிகவும் ஆக்கபூர்வமானதாகவும், முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் அமைந்தது.

பயங்கரவாதம் எந்தவடிவில் இருந்தாலும் அதனை அழிப்பது என்ற இந்தியாவின் நிலைப்பாட்டுடன் உடன்படும் நாடுகளில் எகிப்தும் ஒன்றாகும். பயங்கர வாதத்தை முறியடிக்கும் வகையில் இந்தியா – எகிப்து இடையான பாதுகாப்பு உறவில் கூடுதல் ஒத்துழைப்பு அளிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில், பயங்கரவாதம் தொடர்பான தகவல்களை பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளவும், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை இணைந்துமேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவை மேம்படுத்தும்வகையில், சரக்கு கப்பல் போக்குவரத்துத்துறை தொடர்பான ஒப்பந்தமும் கையெழுத்திடப் பட்டுள்ளது என்றார் நரேந்திர மோடி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்த� ...

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தலுக்கு பின் … கூட்டணி ஆட்சி :மதுரை கூட்டத்தில் அமித் ஷா உறுதி மதுரை, ஜூன் 9- ''தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்திருக்கிறார்கள்: அமித் ஷா தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்துக் கொண்டு ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்க ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்காலம்; அமித் ஷா பெருமிதம் பிரதமர் மோடி தலைமையிலான இந்த 11 ஆண்டு கால ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பி ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பிரதமர் மோடி உறுதி ''நல்லாட்சி, மாற்றத்தில் தெளிவான கவனம் செலுத்தப்படுகிறது'' என பிரதமர் ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை � ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மத்திய அரசு மறுவரையறை செய்துள்ளது 'கடந்த 11 ஆண்டுகளில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை, தேசிய ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலை� ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலையீடும் இல்லை; எல்லாம் பிரதமரின் முடிவு ஆபரேஷன் சிந்தூர் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் ...

மருத்துவ செய்திகள்

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...