நாயுருவியின் மருத்துவக் குணம்

 இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை செய்யும். இதன் குணம் இதன் வேரினால் வசிய முண்டாகும். இலை – இரத்தமூலம், அதிசாரம், கபநோய், வியர்வை, தந்திப் பிரமேகம் இவைகளைப் போக்கும். அரிசி என்கிற இதன்விதை பசியைப் போக்கும் சமூல சாம்பல் பிரசிவித்த மாதர் உதிரசிக்கலை ஒழிக்கும். வங்கத்தைச் செந்தூரமாக்கும்.

 

செந்நாயுருவி இதனால், வீக்கம், பாண்டு, காமாலை, இவை நீங்கும். மாதர்களின் ருதுகாலத்தில் மாதர்களின் சோணிதத்தை வழக்கப்படி உண்டாக்கும்.

இலைக் கற்பமும், வெல்லமும் சேர்த்து அல்லது இலையுடன் மிளகு, பூண்டு சேர்த்தரைத்துச் சுரத்துக்குக் கொடுக்கலாம். இலையை நீர் விட்டரைத்துச் சிறுகடி விடங்களுக்குப் பூசலாம். இலைச்சாற்றை வெய்யிலில் வைத்து வற்றவைத்து மெழுகு பதமாக்கி அத்துடன் சிறிது அபின் சேர்த்துக் கொறுக்கு புண்ணிற்குப் போடச் சுகமாகும்.

நாயுருவி சாம்பல் தெளிநீர் 41/2 லிட்டர் நாயுருவி சாம்பல் ¼ லிட்டர் நல்லெண்ணெய் 1 ½ லிட்டர் இவைகளைச் சேர்த்துக் காய்ச்சிப் பக்குவத்தில் வடித்துக் கொள்ளவும் இத்தைலத்தை, காது செவிடு, காதுசீழ் முதலியவைகளை நீக்கும்.

வேர்ச்சாம்பல் 5 குன்றியிடை வெல்லத்தில் கொடுக்கச் சுகப் பிரசவமுண்டாகும். பச்சை வேரால் பல்துலக்கு வர பல் அழுக்குகள் நீங்கி முகவசீகர முண்டாகும். புண்களை அறுத்துக் குணப்படுத்த இதன் சாம்பல் ஊன் பூச்சுத் தைலத்தில் சேரும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...