நாயுருவியின் மருத்துவக் குணம்

 இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை செய்யும். இதன் குணம் இதன் வேரினால் வசிய முண்டாகும். இலை – இரத்தமூலம், அதிசாரம், கபநோய், வியர்வை, தந்திப் பிரமேகம் இவைகளைப் போக்கும். அரிசி என்கிற இதன்விதை பசியைப் போக்கும் சமூல சாம்பல் பிரசிவித்த மாதர் உதிரசிக்கலை ஒழிக்கும். வங்கத்தைச் செந்தூரமாக்கும்.

 

செந்நாயுருவி இதனால், வீக்கம், பாண்டு, காமாலை, இவை நீங்கும். மாதர்களின் ருதுகாலத்தில் மாதர்களின் சோணிதத்தை வழக்கப்படி உண்டாக்கும்.

இலைக் கற்பமும், வெல்லமும் சேர்த்து அல்லது இலையுடன் மிளகு, பூண்டு சேர்த்தரைத்துச் சுரத்துக்குக் கொடுக்கலாம். இலையை நீர் விட்டரைத்துச் சிறுகடி விடங்களுக்குப் பூசலாம். இலைச்சாற்றை வெய்யிலில் வைத்து வற்றவைத்து மெழுகு பதமாக்கி அத்துடன் சிறிது அபின் சேர்த்துக் கொறுக்கு புண்ணிற்குப் போடச் சுகமாகும்.

நாயுருவி சாம்பல் தெளிநீர் 41/2 லிட்டர் நாயுருவி சாம்பல் ¼ லிட்டர் நல்லெண்ணெய் 1 ½ லிட்டர் இவைகளைச் சேர்த்துக் காய்ச்சிப் பக்குவத்தில் வடித்துக் கொள்ளவும் இத்தைலத்தை, காது செவிடு, காதுசீழ் முதலியவைகளை நீக்கும்.

வேர்ச்சாம்பல் 5 குன்றியிடை வெல்லத்தில் கொடுக்கச் சுகப் பிரசவமுண்டாகும். பச்சை வேரால் பல்துலக்கு வர பல் அழுக்குகள் நீங்கி முகவசீகர முண்டாகும். புண்களை அறுத்துக் குணப்படுத்த இதன் சாம்பல் ஊன் பூச்சுத் தைலத்தில் சேரும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...