லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு

லாவோ மக்கள் புரட்சிக் கட்சியின் மத்தியக் குழு பொதுச் செயலாளரும், லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசின் அதிபருமான திரு தோங்லூன் சிசோலித்தை பிரதமர் திரு நரேந்திர மோடி, வியன்டியானில் இன்று சந்தித்தார். ஆசியான் உச்சிமாநாட்டையும் கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டையும் வெற்றிகரமாக நடத்தியதற்காக அதிபர் திரு சிசோலித்தைப் பிரதமர் பாராட்டினார்.

இரு தலைவர்களும் இருதரப்பு உறவுகள் குறித்து விவாதித்ததுடன், நெருங்கிய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர். இந்தியா-லாவோஸ் இடையேயான சமகால நட்புறவு, பழமையான நாகரீக பிணைப்பில் ஆழமாக வேரூன்றியுள்ளது என்று அவர்கள் குறிப்பிட்டனர். வளர்ச்சிக் கூட்டாண்மை, பாரம்பரிய மீட்பு, கலாச்சார பரிமாற்றங்கள் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்று வரும் ஒத்துழைப்பு குறித்து அவர்கள் திருப்தி தெரிவித்தனர். இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கையின் பத்தாண்டுகளை 2024-ம் ஆண்டு குறிக்கிறது என்று குறிப்பிட்ட பிரதமர், லாவோஸ் உடனான இந்தியாவின் ஈடுபாட்டிற்கு மேலும் உத்வேகம் அளிப்பதில் இது முக்கியமானதாக உள்ளது என்றார். இரு நாடுகளுக்கும் இடையேயான நாகரீக உறவுகள் பற்றி குறிப்பிட்ட பிரதமர், புதிய நாளந்தா பல்கலைக்கழகம் அளிக்கும் வாய்ப்புகள் மூலம் மக்களுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். யாகி புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை அடுத்து லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசுக்கு இந்தியா அளித்த மனிதாபிமான உதவிக்காக பிரதமருக்கு அதிபர் திரு சிசோலித் நன்றி தெரிவித்தார்.

இந்தியா-ஆசியான் உறவுகளை வலுப்படுத்த லாவோஸ் அளித்து வரும் ஆதரவுக்காக அதிபர் சிசோலித்திற்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். இரு தலைவர்களும் பரஸ்பர ஆர்வமுள்ள பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் விவாதித்தனர்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள ...

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு; பிரதமர் மோடி பெருமிதம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதை அரசு உறுதி செய்கிறது'' ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் & ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் – மத்திய அரசின் முடிவை அமல்படுத்திய டில்லி பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற மத்திய ...

இந்திய ராணுவம் பதிலடி

இந்திய ராணுவம் பதிலடி காஷ்மீர் எல்லைக்கோட்டுப் பகுதியின் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் பாகிஸ்தான் ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும்; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தாண்டி, அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வ ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வேண்டும் ''பஹல்காமில் பயங்கரவாதிகள் எந்த பயமும் இல்லாமல் அப்பாவி மக்களை ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர்கள் சத்தீஸ்கர் - தெலுங்கானா - மஹாராஷ்டிரா எல்லையில், நக்சல்களுக்கு ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்

நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ...

ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ...

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...