பொடுதலையின் மருத்துவக் குணம்

 பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. சதை நரம்புகளைச் சுருங்கச் செய்வதாகவும், தாது பலமுண்டாக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

பொடுதலை, சமூலச் சாற்றில் சமனளவு, நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி வடித்து வாரம் இருமுறை தலைமுழுகிவரத் தலையில் உள்ள தோல்நோய், பொடுகு முதலியன தீர்ந்து குணமாகும்.

பொடுதலை இலையுடன் இஞ்சி, புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து துவையலாக்கிச் சுடுசோற்றில் நெய்யுடன் உண்டுவர மார்புச்சளி, சுவாசக் காசம் தீர்ந்து குணமாகும்.

பொடுதலை இலையுடன் சீரகம் சமனளவு சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து எருமைத்தயிர் அல்லது வெண்ணெயில் கொடுக்க வெள்ளை படுதல் வெட்டைச்சூடு ஆகியவை தீர்ந்து குணமாகும்.

பொடுதலை இலை கைப்பிடி அளவு எடுத்து வெள்ளைப் பூண்டு ஏழு, மிளகு 15, சுக்கு ஒரு பாக்களவு சேர்த்து நெகிழ அரைத்து வாயிலிட்டு வெந்நீரில் குடுத்துவிட வேண்டும். இவ்விதமாக வெறும் வயிற்றில் 7 நாட்கள் செய்து உப்பிலாப் பத்தியம் இருந்து துவரம் பருப்பை மட்டும் வறுத்து தொட்டுக்கொள்ளச் செய்யவும்.

பொடுதலை இலையை சிறிய மஞ்சள் துண்டுடன் சேர்த்து அரைத்து ஆறாத புண்ணின்மேல் வைத்துக்கட்டி வந்தால் புண் ஆறி குணமாகும். தினசரி இவ்விதம் செய்து வரவேண்டும்.

நன்றி : முடி முதல் அடிவரை மூலிகை மருத்துவம்
டாக்டர். மு. போத்தியப்பன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...