நாம் அனைவரும் இணைந்து வளமாக வாழவேண்டும் அல்லது அனை வரும் மடிந்துவிட வேண்டும்

தீவிரவாதம் நிகழ்கால அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள நிலையில், இந்தவிவகாரத்தில் சிலநாடுகள் கபடநாடகம் ஆடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. பொதுசபையில், முதன்முறையாக அகதிகள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களுக்கான உச்சிமாநாடு நடைபெறுகிறது. இதில் இந்தியா சார்பில் பங்கேற்றுள்ள மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் எம். ஜே.அக்பர் பேசியதாவது:

சர்வதேச அளவில் 25 கோடி பேர் (30-ல் ஒருவர்) அகதிகளாக உள்ளதாக புள்ளிவிவரம் கூறுகி றது. இதில் 75 சதவீத அகதிகள் வெறும் 11 நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

ஒருநாட்டில் நடக்கும் இனமோதல், போர் மற்றும் வறுமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மக்கள் பிறநாடுகளுக்கு அகதிகளாக புலம் பெயர்கிறார்கள். இது தவிர தீவிரவாதமும் அடிப்படைக் காரணமாக விளங்குகிறது.

எனவே, தீவிரவாதத்தை நாம் புறக்கணித்துவிட முடியாது. தீவிரவாதம் இப்போது நிகழ்கால அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. மனித உரிமைக்கு மிகப் பெரிய அபாயமாகவும் இது விளங்குகிறது.

இதை நல்லதீவிரவாதம், கெட்ட தீவிரவாதம் என்று பிரித்துப்பார்க்க முடியாது. இந்தவிவகாரத்தில் சில நாடுகள் கபடநாடகம் ஆடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நாம் அனைவரும் இணைந்து வளமாக வாழவேண்டும் அல்லது அனை வரும் மடிந்துவிட வேண்டும். நாம் அமைதியாகவும் இணக்கமாகவும் வளமாகவும் வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.

நோய் வந்த பிறகு அதைக் குணப்படுத்துவதை விட, வருமுன் காப்பதே சிறந்தது. எனவே, சொந்த நாட்டை விட்டு மக்கள் வெளியேறு வதற்கான காரணத்தைக் கண்டறிந்து அதற்கு தீர்வு காணவேண்டும்.

குறிப்பாக தீவிரவாதத்தை ஒடுக்கவும் உள்நாட்டுப்போர் உருவாவதைத் தடுக்கவும் சர்வதேச சமுதாயம் முன்வரவேண்டும். நல்லாட்சி, வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்வதன் மூலமும் அகதிகள் உருவாவதை தடுக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிர� ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழ� ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழுவை சந்திக்கும் பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கங்களை கூற ...

மருத்துவ செய்திகள்

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...

மிக அழகான தோல் வேண்டுமா?

மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது ...

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...