நாம் அனைவரும் இணைந்து வளமாக வாழவேண்டும் அல்லது அனை வரும் மடிந்துவிட வேண்டும்

தீவிரவாதம் நிகழ்கால அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள நிலையில், இந்தவிவகாரத்தில் சிலநாடுகள் கபடநாடகம் ஆடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. பொதுசபையில், முதன்முறையாக அகதிகள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களுக்கான உச்சிமாநாடு நடைபெறுகிறது. இதில் இந்தியா சார்பில் பங்கேற்றுள்ள மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் எம். ஜே.அக்பர் பேசியதாவது:

சர்வதேச அளவில் 25 கோடி பேர் (30-ல் ஒருவர்) அகதிகளாக உள்ளதாக புள்ளிவிவரம் கூறுகி றது. இதில் 75 சதவீத அகதிகள் வெறும் 11 நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

ஒருநாட்டில் நடக்கும் இனமோதல், போர் மற்றும் வறுமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மக்கள் பிறநாடுகளுக்கு அகதிகளாக புலம் பெயர்கிறார்கள். இது தவிர தீவிரவாதமும் அடிப்படைக் காரணமாக விளங்குகிறது.

எனவே, தீவிரவாதத்தை நாம் புறக்கணித்துவிட முடியாது. தீவிரவாதம் இப்போது நிகழ்கால அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. மனித உரிமைக்கு மிகப் பெரிய அபாயமாகவும் இது விளங்குகிறது.

இதை நல்லதீவிரவாதம், கெட்ட தீவிரவாதம் என்று பிரித்துப்பார்க்க முடியாது. இந்தவிவகாரத்தில் சில நாடுகள் கபடநாடகம் ஆடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நாம் அனைவரும் இணைந்து வளமாக வாழவேண்டும் அல்லது அனை வரும் மடிந்துவிட வேண்டும். நாம் அமைதியாகவும் இணக்கமாகவும் வளமாகவும் வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.

நோய் வந்த பிறகு அதைக் குணப்படுத்துவதை விட, வருமுன் காப்பதே சிறந்தது. எனவே, சொந்த நாட்டை விட்டு மக்கள் வெளியேறு வதற்கான காரணத்தைக் கண்டறிந்து அதற்கு தீர்வு காணவேண்டும்.

குறிப்பாக தீவிரவாதத்தை ஒடுக்கவும் உள்நாட்டுப்போர் உருவாவதைத் தடுக்கவும் சர்வதேச சமுதாயம் முன்வரவேண்டும். நல்லாட்சி, வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்வதன் மூலமும் அகதிகள் உருவாவதை தடுக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...

அரச இலையின் மருத்துவக் குணம்

அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ...

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...