நாம் அனைவரும் இணைந்து வளமாக வாழவேண்டும் அல்லது அனை வரும் மடிந்துவிட வேண்டும்

தீவிரவாதம் நிகழ்கால அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள நிலையில், இந்தவிவகாரத்தில் சிலநாடுகள் கபடநாடகம் ஆடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. பொதுசபையில், முதன்முறையாக அகதிகள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களுக்கான உச்சிமாநாடு நடைபெறுகிறது. இதில் இந்தியா சார்பில் பங்கேற்றுள்ள மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் எம். ஜே.அக்பர் பேசியதாவது:

சர்வதேச அளவில் 25 கோடி பேர் (30-ல் ஒருவர்) அகதிகளாக உள்ளதாக புள்ளிவிவரம் கூறுகி றது. இதில் 75 சதவீத அகதிகள் வெறும் 11 நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

ஒருநாட்டில் நடக்கும் இனமோதல், போர் மற்றும் வறுமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மக்கள் பிறநாடுகளுக்கு அகதிகளாக புலம் பெயர்கிறார்கள். இது தவிர தீவிரவாதமும் அடிப்படைக் காரணமாக விளங்குகிறது.

எனவே, தீவிரவாதத்தை நாம் புறக்கணித்துவிட முடியாது. தீவிரவாதம் இப்போது நிகழ்கால அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. மனித உரிமைக்கு மிகப் பெரிய அபாயமாகவும் இது விளங்குகிறது.

இதை நல்லதீவிரவாதம், கெட்ட தீவிரவாதம் என்று பிரித்துப்பார்க்க முடியாது. இந்தவிவகாரத்தில் சில நாடுகள் கபடநாடகம் ஆடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நாம் அனைவரும் இணைந்து வளமாக வாழவேண்டும் அல்லது அனை வரும் மடிந்துவிட வேண்டும். நாம் அமைதியாகவும் இணக்கமாகவும் வளமாகவும் வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.

நோய் வந்த பிறகு அதைக் குணப்படுத்துவதை விட, வருமுன் காப்பதே சிறந்தது. எனவே, சொந்த நாட்டை விட்டு மக்கள் வெளியேறு வதற்கான காரணத்தைக் கண்டறிந்து அதற்கு தீர்வு காணவேண்டும்.

குறிப்பாக தீவிரவாதத்தை ஒடுக்கவும் உள்நாட்டுப்போர் உருவாவதைத் தடுக்கவும் சர்வதேச சமுதாயம் முன்வரவேண்டும். நல்லாட்சி, வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்வதன் மூலமும் அகதிகள் உருவாவதை தடுக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...