சிரமங்களை மட்டும் ஒளிபரப்புவது நாட்டுக்கு நல்லதல்ல

ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மக்கள் மாற்றுவதில் உள்ள சிரமங்களைமட்டும் ஒளிபரப்புவது நாட்டுக்கு நல்லதல்ல என்று மத்திய மந்திரி வெங்கையா நாயுடு வேதனைதெரிவித்தார்.

ஊடகங்களின் பொருளாதார ஆசிரியர்கள் மாநாடு டெல்லியில் நேற்று 2-வது நாளாக நடந்தது. இதில் கலந்துகொண்டு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புதுறை மந்திரி வெங்கையா நாயுடு பேசியதாவது:-

நாட்டின் பொருளாதார நலனை கருத்தில்கொண்டு கருப்பு பணத்தை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் 8-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக நடவடிக்கை மேற்கொண்டார். இதனால் நாட்டில் எதுவும் முடங்கி போய்விட வில்லை. பஸ்கள், மெட்ரோ ரெயில்கள் உள்ளிட்ட அனைத்தும் இயங்கி கொண்டுதான் இருக்கின்றன. கருப்பு பணம் மட்டுமே முடக்கப்பட்டுள்ளது.

ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற பிரதமரின் அறிவிப்பு எதிர்பாராத ஒன்றாக இருக்கலாம். ஆனால் கருப்புபணத்தை ஒழிக்கும் வகையில் பிரதமர் மேற்கொண்ட முடிவு சரித்திரம்படைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இதில் பிரதமர் தன்னிச்சையாக எந்த முடிவையும் மேற்கொள்ளவில்லை.

செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் படும்சிரமங்களை தொலைக்காட்சிகள் ஒளிபரப்புவதில் தவறு இல்லை. அதேசமயம் சிரமங்களை மட்டும் காட்டுவது நல்லதல்ல. வரலாற்று சிறப்புமிக்க இந்தநடவடிக்கை சில சுயநலவாதிகளை தவிர மற்ற அனைவராலும் பாராட்டப் படுகிறது.

கருப்பு பணத்துக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி பெரும் போர்தொடுத்து இருக்கிறார். சீர்திருத்தம், திறமையாக செயல்படுதல், மாற்றத்தை ஏற்படுத்துதல் ஆகிய 3 மூல மந்திரங்களை நமக்கு அளித்துள்ளார். உடல், மனம், பணம் இந்த மூன்றிலும் அனைவரும் தூய்மையாக இருக்கவேண்டும் என்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா மிகவேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. வெளிநாட்டு முதலீடும், அன்னியசெலாவணி கையிருப்பும் அதிகரித்துள்ளது. இவை அனைத்தும் பொது மக்களை சென்றடைவதற்காகதான் இந்த கருப்புபண ஒழிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

பொதுமக்கள் யாரும் பதற்றமடைய வேண்டாம். உங்கள்கையில் உள்ளது நல்லபணமாக இருந்தால் அது செல்லும். கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம், கணக்கில் உள்ள பணத்திற்கு எந்த பிரச்சினையும் இல்லை. விவசாய வருமானத்திற்கு வரி எதுவும்இல்லை.

புதிய ரூபாய் நோட்டில் காந்தியின் கண்ணாடி உள்ளது. அந்தகண்ணாடி கருப்பு பணம் பதுக்கி வைத்துள்ளவர்களை பார்த்து கொண்டுதான் இருக்கிறது.

டெல்லியில் அடுத்த மாதம் (டிசம்பர்) 9, 10-ந் தேதிகளில் அனைத்து மாநில தகவல் மற்றும் ஒளிபரப்புதுறை மந்திரிகளின் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இவ்வாறு அவர் பேசினார். 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...

சிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா ?

சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ...

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...