பேரீச்சையின் மருத்துவக் குணம்

 பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் பேரீச்சை உண்பது டானிக் சாப்பிட்டது போலாகும். சொல்லப்போனால் மற்ற டானிக்குகளைவிட மேம்பட்டது என்பதே உண்மை. பேரீச்சையில் இருந்து தயாரிக்கப்படும் 'சிரப்' வயிற்றுப்போக்கு, நீரிழிவுக்குப் பரிகாரமாகும்.

 

பேரீச்சை உடம்புக்கு ஆரோக்கியம் அளிக்கும் தன்மை காரணமாக அதுவும் ஒரு மருந்தைப்போல் மதிக்கப்படுகிறது. எளிதில் சீரணமாகும். சக்தியை வழங்கும்.

பாலில் பேரீச்சம் பழத்தை இட்டுக் காய்ச்சினால் அது சிறந்த ஆரோக்கிய பானமாகிவிடும். குழந்தைகள், பெரியவர்கள் நோயாளிகள் என்று எல்லோருக்கும் உகந்தது.

குடல் தொந்தரவுகள்
பேரீச்சையில் உள்ள நச்சுப்பொருள் ஒன்று குடல் உபாதைகளுக்கு நல்ல பரிகாரமாக அமையும். நம் குடலில் உடம்புக்கு நல்லது செய்யும் பாக்டீரியா காலனியை நிறுவுவதிலும் ஒத்தாசை புரியும்.

மலச்சிக்கல்
இரவில் பேரீச்சம்பழதை தண்ணீரில் ஊறவைத்து மறு நாள் காலையில் அருந்த மலச்சிக்கல் தீரும்.

இருதய பலவீனம்
பேரீச்சம் பழத்தை தண்ணீரில் இரவு முழுக்க ஊறவைத்து, காலையில், அதே தண்ணீரில் பழத்தைப் பிசைந்து விதை நீக்கி உட்கொள்ளலாம். இப்படி வாரம் இருமுறை உட்கொண்டுவர இருதயம் உறுதி அடையும்.

பால் சார்ந்த பலவீனம்
பால் சார்ந்த பலவீனத்துக்கு பேரீச்சம்பழம் உபயோகமாக இருக்கும். ஒரு கைப்பிடி பேரீச்சம்பழத்தை வெள்ளாட்டுப்பாலில் ஊறவைத்து (இரவு முழுதும்) காலையில் அதே பாலில் உண்ணவேண்டும். இந்தத் தயாரிப்பில் ஏலப்பொடி, தேன் சேர்த்துக் கொள்ளவும். உறவுக்கான ஆற்றல் மேம்படும்.

நன்றி : நரேந்திரன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வறுமை ஒழிப்புக்கு சொத்துரிமை அ ...

வறுமை ஒழிப்புக்கு சொத்துரிமை அவசியம் – பிரதமர் மோடி 'உலகம் முழுவதும் சொத்துரிமை ஒரு பெரிய சவாலாக உள்ளது, ...

ஒடிசா மாநில அரசுடன் சிங்கப்பூர ...

ஒடிசா மாநில அரசுடன் சிங்கப்பூர் அதிபர் ஒப்பந்தம் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் ...

பிப்ரவரி 1ம் தேதி மத்திய அமைச்ச ...

பிப்ரவரி 1ம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் பிப்.1ம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய ...

இந்தியாவின் ஆட்டோ மொபைல் துறைய ...

இந்தியாவின் ஆட்டோ மொபைல் துறையின் வளர்ச்சி : ரத்தன் டாட்டாவை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சிக்கு தொழிலதிபர் ரத்தன் டாடா ...

பெங்களூரில் அமெரிக்க தூதரகம் த ...

பெங்களூரில் அமெரிக்க தூதரகம் திறந்துவைப்பு பெங்களூருவில் அமெரிக்க துணை தூதரகம் திறக்கப்பட்டது. இப்போதைக்கு விசா ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் எம்:ஜி:ஆர் – பிரதமர் மோடி புகழாரம் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி ...

மருத்துவ செய்திகள்

“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)

நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ...

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...