பேரீச்சையின் மருத்துவக் குணம்

 பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் பேரீச்சை உண்பது டானிக் சாப்பிட்டது போலாகும். சொல்லப்போனால் மற்ற டானிக்குகளைவிட மேம்பட்டது என்பதே உண்மை. பேரீச்சையில் இருந்து தயாரிக்கப்படும் 'சிரப்' வயிற்றுப்போக்கு, நீரிழிவுக்குப் பரிகாரமாகும்.

 

பேரீச்சை உடம்புக்கு ஆரோக்கியம் அளிக்கும் தன்மை காரணமாக அதுவும் ஒரு மருந்தைப்போல் மதிக்கப்படுகிறது. எளிதில் சீரணமாகும். சக்தியை வழங்கும்.

பாலில் பேரீச்சம் பழத்தை இட்டுக் காய்ச்சினால் அது சிறந்த ஆரோக்கிய பானமாகிவிடும். குழந்தைகள், பெரியவர்கள் நோயாளிகள் என்று எல்லோருக்கும் உகந்தது.

குடல் தொந்தரவுகள்
பேரீச்சையில் உள்ள நச்சுப்பொருள் ஒன்று குடல் உபாதைகளுக்கு நல்ல பரிகாரமாக அமையும். நம் குடலில் உடம்புக்கு நல்லது செய்யும் பாக்டீரியா காலனியை நிறுவுவதிலும் ஒத்தாசை புரியும்.

மலச்சிக்கல்
இரவில் பேரீச்சம்பழதை தண்ணீரில் ஊறவைத்து மறு நாள் காலையில் அருந்த மலச்சிக்கல் தீரும்.

இருதய பலவீனம்
பேரீச்சம் பழத்தை தண்ணீரில் இரவு முழுக்க ஊறவைத்து, காலையில், அதே தண்ணீரில் பழத்தைப் பிசைந்து விதை நீக்கி உட்கொள்ளலாம். இப்படி வாரம் இருமுறை உட்கொண்டுவர இருதயம் உறுதி அடையும்.

பால் சார்ந்த பலவீனம்
பால் சார்ந்த பலவீனத்துக்கு பேரீச்சம்பழம் உபயோகமாக இருக்கும். ஒரு கைப்பிடி பேரீச்சம்பழத்தை வெள்ளாட்டுப்பாலில் ஊறவைத்து (இரவு முழுதும்) காலையில் அதே பாலில் உண்ணவேண்டும். இந்தத் தயாரிப்பில் ஏலப்பொடி, தேன் சேர்த்துக் கொள்ளவும். உறவுக்கான ஆற்றல் மேம்படும்.

நன்றி : நரேந்திரன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தி ...

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் பிரதமர் மரியாதை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் பொருளாதாரத்துடன் நானோ அறிவியல் 5 டிரில்லியன்டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

மருத்துவ செய்திகள்

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...