தமிழக பாஜக.,வின் அழுத்தம் காரணமாகவே பொங்கல் பண்டிகை பொதுவிடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழக பாரதிய ஜனதா கட்சியினரின் அழுத்தம் காரணமாகவே பொங்கல் பண்டிகையை பொதுவிடுமுறையாக மத்திய அரசு அறிவித்துள்ளது என்று மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

கோவையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தனியார்நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:


 தமிழக பாஜகவினர் கொடுத்த அழுத்தம் காரணமாகவே மத்திய அரசு பொங்கல்பண்டிகையை விருப்ப முறையில் இருந்து பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. இதன் மூலமாகத் தமிழர்கள் உதாசீனப்படுத்தப்படவோ அல்லது புறக்கணிக்கப் படவோ இல்லை என்பது தெளிவுபடுத்தப் பட்டுள்ளது.

தமிழகத்தை வறட்சிமாநிலமாக அறிவித்தால் மட்டும்போதாது. விவசாயிகளின் அடிப்படைத் தேவைகளை அறிந்து ஆறுகளைத் தூர்வாரி, மணல் அள்ளுவதைத் தடுக்கவேண்டும். மேலும், விவசாயிகளுக்கான காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்றார்.

முன்னதாக அவர் விமானநிலையத்தில் அளித்த பேட்டியில், "தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த சட்ட ரீதியான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துவருகிறது. ஆனால், அந்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், சட்டத் திருத்தம்கொண்டு வந்தாலும் மத்திய அரசால் அனுமதிவாங்க இயலாது.

ஆகவே, ஜல்லிக்கட்டுபோட்டி நடத்த அரசாணையைத் தமிழக அரசு பிறப்பிக்கவேண்டும். அவ்வாறு சட்ட விதிகளுக்கு உள்பட்டு நடப்பதற்கு மத்திய அரசும், தமிழக பாஜகவும் முழுஒத்துழைப்பு அளிக்கும். அதையும் மீறி ஜல்லிக்கட்டு நடந்தால், அதற்கு உணர்வுப் பூர்வமாக ஆதரவு அளிப்போம் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...