தமிழக பாஜக.,வின் அழுத்தம் காரணமாகவே பொங்கல் பண்டிகை பொதுவிடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழக பாரதிய ஜனதா கட்சியினரின் அழுத்தம் காரணமாகவே பொங்கல் பண்டிகையை பொதுவிடுமுறையாக மத்திய அரசு அறிவித்துள்ளது என்று மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

கோவையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தனியார்நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:


 தமிழக பாஜகவினர் கொடுத்த அழுத்தம் காரணமாகவே மத்திய அரசு பொங்கல்பண்டிகையை விருப்ப முறையில் இருந்து பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. இதன் மூலமாகத் தமிழர்கள் உதாசீனப்படுத்தப்படவோ அல்லது புறக்கணிக்கப் படவோ இல்லை என்பது தெளிவுபடுத்தப் பட்டுள்ளது.

தமிழகத்தை வறட்சிமாநிலமாக அறிவித்தால் மட்டும்போதாது. விவசாயிகளின் அடிப்படைத் தேவைகளை அறிந்து ஆறுகளைத் தூர்வாரி, மணல் அள்ளுவதைத் தடுக்கவேண்டும். மேலும், விவசாயிகளுக்கான காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்றார்.

முன்னதாக அவர் விமானநிலையத்தில் அளித்த பேட்டியில், "தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த சட்ட ரீதியான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துவருகிறது. ஆனால், அந்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், சட்டத் திருத்தம்கொண்டு வந்தாலும் மத்திய அரசால் அனுமதிவாங்க இயலாது.

ஆகவே, ஜல்லிக்கட்டுபோட்டி நடத்த அரசாணையைத் தமிழக அரசு பிறப்பிக்கவேண்டும். அவ்வாறு சட்ட விதிகளுக்கு உள்பட்டு நடப்பதற்கு மத்திய அரசும், தமிழக பாஜகவும் முழுஒத்துழைப்பு அளிக்கும். அதையும் மீறி ஜல்லிக்கட்டு நடந்தால், அதற்கு உணர்வுப் பூர்வமாக ஆதரவு அளிப்போம் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...