இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. இதை உண்டு வந்தால், உடலைத் தேற்றி உரமாக்கிப் பலப்படச் செய்யும். இது காமத்தைப் பெருக்கும். இடத்தை முறைப்படி மருந்து செய்து உண்டால் மேக மூத்திரத்தை நீக்கும். வசியத்திற்கு உதவும். ஓடி கட்டுகின்ற வாதத் தடிப்பைக் கரைக்கும்.
இதன் இலைச் சாற்றைச் சீலைபுண்களிற் காய்ச்சி கட்டி வரக் குணமாகும். இதன் இலையை நீரில் காய்ச்சி அக்கஷாயத்தை இடுப்பு நோய்க்கும் குண்டிக்காய் வேதனைக்கும் ஒற்றடமிட வேதனை தணியும். இலையையும், வேரையும் உலர்த்தி, பொடித்துப் பாலில் 5 கிராம் சேர்த்துக் கொடுக்க மூலவியாதிகள் நீங்கும். வேர் ஒரு பங்கு தண்ணீர் 10 பங்கு முறைப்படி கஷாயமிட்டு 5,10 மில்லி கொடுத்து மூலநோய்கள் நீங்கி இரத்தம் சுத்தியாகும்.
உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ... |
உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.