மு.க.ஸ்டாலின், சீமான் ஆகியோரை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியி ருப்பதற்கான உள்நோக்கம் புரிய வில்லை

மு.க.ஸ்டாலின், சீமான் ஆகியோரை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியி ருப்பதற்கான உள்நோக்கம் புரிய வில்லை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். சென்னை கோடம் பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் கடந்த 5 நாள்களாக ரசிகர்கள் ரஜினி காந்த் சந்தித்துவந்தார்.

கடைசி நாளான வெள்ளிக் கிழமை அவர் ரசிகர்கள் முன்னிலையில் உரையாற்றினர். அப்போது அவர் பேசுகையில் , முக.ஸ்டாலின் சிறந்த நிர்வாகி, சீமான் சிறந்தபோராளி, அவரது பேச்சுகளை கேட்டு நானே பிரமித்திருக்கிறேன். தொல் திருமாவளவன் திறமைசாலி, அன்புமணி ராமதாஸ் புதுமையைபுகுத்துபவர் என்று தெரிவித்தார்.

இதுகுறித்து நாகர் கோவிலில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், நடிகர் ரஜினி காந்த் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது. அவர் பாஜக.,வில் இணைந்தால் மகிழ்ச்சி அடைவோம்.

அரசியலுக்கு வரவேண்டுமா அல்லது பாஜகவில் இணைய வேண்டுமா என்பது அவரது தனிப்பட்ட விருப்ப மாகும். ஆனால் போர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்கிறாரே அதுதான் என்னவென்று புரியவில்லை.

ஸ்டாலின் சிறந்தநிர்வாகி, சீமான் சிறந்தபோராளி என்று ரஜினி கூறியிருக்கிறார். அதன் உள்நோக்கம் எனக்கு புரியவில்லை.தமிழகம் கடந்த பலஆண்டுகளாக நடிப்புத்துறையின் பிடியில்தான் இருக்கிறது என்பது தவறு. யார் எந்ததுறையில் இருக்கிறார்கள் என்பது முக்கியம் இல்லை. எப்படிப்பட்ட ஆட்சி என்பது தான் முக்கியம். என்னை பொறுத்த வரையில் தமிழகத்தில் பாஜக ஆட்சி தான் வரவேண்டும்.

 

தமிழகத்தில் பாஜகவால் கால் ஊன்றமுடியாது என்று சிலர் கூறிவருகின்றனர். ஆனால் உண்மையை சொல்ல போனால், தமிழகத்தில் எந்த கட்சிகளுக்கும் கால்கள் இல்லை. ஊன்றியகாலையும் அதிமுகவும், திமுகவும் எப்போதோ இழந்து விட்டன. தமிழர்களின் பிரச்சினைகளை யார் சொல்லியும் தெரிந்துகொள்ள வேண்டிய நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இல்லை என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...