நாடாளுமன்றத் தேர்தல் கட்சித்தலைமை சொன்னால் போட்டியிடுவேன்

நாடாளுமன்றத் தேர்தலில் கட்சித்தலைமை எந்ததொகுதியில் போட்டியிட சொன்னாலும் நான் போட்டியிடுவேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பாஜகவிற்கு வாக்குசதவிகிதம் அதிகம் உள்ள 5 தொகுதிகளை அக்கட்சி மேலிடம் தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதில், ஒருதொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை களம்இறக்க கட்சி மேலிடம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் வாக்குறுதி தயாரிப்புகுறித்து கருத்து கேட்புக் கூட்டம் சென்னை அமைந்தகரையில் நடைபெற்றது.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலையிடம், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளீர்களா என்றகேள்வி எழுப்பப்பட்டது. அதற்குபதிலளித்த அவர், கட்சித் தலைமை தன்னை எந்தஇடத்தில், எந்ததொகுதியில் போட்டியிட சொன்னாலும் நான் போட்டியிடுவேன் என்றார். அதேவேளையில், பிரசாரம் மேற்கொள்ள சொன்னால் பிரசாரம் செய்வேன். ஆனால் தன்னை பொறுத்தவரை சொந்தவிருப்பம் என்று எதுவும் கிடையாது என கூறினார்.

மேலும், இன்னும் 60 நாட்களுக்கு தன்னை எப்படி பயன் படுத்த வேண்டும் என்பது கட்சியின் தலைமைக்கு தெரியும். அந்த அடிப்படையில்தான் செயல்படுவேன். மத்திய அமைச்சர்களை போட்டியிட வைத்து ஜெயிக்க வைக்க தயாரா என்று அதிமுகவின் கே.பி.முனுசாமி விடுத்த சவால் குறித்தும் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கும் பதில் அளித்த அண்ணாமலை, ஏன் மத்திய அமைச்சர்களை போட்டியிட வைக்கவேண்டும். சாதாரண கிளை நிர்வாகியை கூட கட்சி போட்டியிட வைக்கும். மேலும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒருதோல்வியடைந்த நடிகர் என்று அண்ணாமலை விமர்சனம் செய்தார். அவரது தந்தை பேரையும், தாத்தா பெயரையும் எடுத்துவிட்டால் உதயநிதிக்கு எந்த முகவரியும் இல்லை என்று விமர்சித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...

அரச இலையின் மருத்துவக் குணம்

அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ...