அவை நடைபெறும் போது பா.ஜ.க. எம்.பி.க்கள் கண்டிப்பாக உள்ளே இருக்கவேண்டும்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது. இதில் எதிர்க் கட்சிகள் பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி அமளியில் ஈடுபட்டுவருகின்றது. எதிர்க் கட்சிகளின் அமளிகளுக்கு நடுவே பல்வேறு மசோதாக்கள் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டு வருகின்றது. இதில், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தொடர்பான சட்டதிருத்த மசோதா நேற்று மாநிலங்களவையில் விவாதத்துக்குவந்தது. விவாதம் முடிவடைந்து திருத்தங்கள் மீது வாக்கெடுப்பும் நடைபெற்றது.

 

வாக்கெடுப்பின்போது, பா.ஜ.க. தரப்பு எம்.பி.க்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளைச்சேர்ந்த சுமார் 30 எம்.பி.க்கள் அவையில் இல்லை. இது எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக மாறிவிட்டது. அவர்கள் கொண்டுவந்த திருத்தங்கள் பெரும்பான்மையுடன் நிறைவேறியது. இது பா.ஜ.க. தரப்புக்கு சங்கடமான நிலையை ஏற்படுத்தியது. 

 

இந்த நிலையில், பா.ஜ.க. பாராளுமன்றக்குழு கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அவை நடைபெறும் போது கண்டிப்பாக உள்ளே இருக்கவேண்டும் என்று பா.ஜ.க. மாநிலங்களவை எம்.பி.களுக்கு அமித்ஷா வலியுறுத்தினார்.  

 

கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பாராளுமன்ற விவகாரங்களுக்கான மந்திரி அனந்த் குமார், ‘பா.ஜ.க. எம்.பி.க்கள்  நிச்சயம் அவையில் இருக்கவேண்டும். அவையில் எம்.பி.க்கள் இல்லாத விவகாரத்தை தலைவர் (அமித்ஷா) தீவிரமாக எடுத்துள்ளார். இதுபோன்று திரும்பவும் நடைபெறக் கூடாது” என்றார்.

 

இன்றைய கூட்டத்தில் பிரதமர் கலந்துகொள்ளவில்லை. இருப்பினும், அவையில் இல்லாத வர்களின் பட்டியல் நேற்று இரவுகேட்டதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், ...

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், பிகார், உ.பி., செல்லும் மோடி பிரதமர் நரேந்திர மோடி மே 29, 30 அகிய ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து வி� ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் சரியான பதிலடி – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் சிக்கிம், மேற்கு ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலும� ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை” – பிரதமர் மோடி மாவோயிஸ்ட் வன்முறை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான � ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சியை பாராட்டிய பிரதமர் மோடி ஐ.பி.எல் தொடரில் அனைவராலும் பாராட்டு பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு.க. அரசு முடிவு; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு பஸ் கட்டணத்தையும் உயர்த்தி முடிந்தவரை கொள்ளையடிக்க தி.மு.க. அரசு ...

மருத்துவ செய்திகள்

கருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை

சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ...

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...

“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)

நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ...