“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)

 நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். இந்நிலையை 'தாழ்நிலை சர்க்கரை' என்று குறிப்பிடுவர்.

பொதுவாக இரத்தத்தில் சர்க்கரையின் அளவு 60க்கும் குறைவாக (Blood Sugar Level <60) வரும்போது, ஒருவருக்குத் தாழ்நிலைச் சர்க்கரை உள்ளதாகச் சொல்லலாம்.

தாழ்நிலை சர்க்கரை ஏற்படக் காரணங்கள்
அவர் குறைவாக சாப்பிடுவதால்
அவர் உடலில் இன்சுலின் அதிகமாகச் சுரப்பதால்
அவர் நீரிழிவுநோயைக் கட்டுப்படுத்த எடுத்துக் கொள்ளும் மருந்துகளின் அளவு அதிகமாகிவிடும்போது.
அவர் அதிக அளவில் உடற்பயிற்சி செய்வது போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

தாழ்நிலை சர்க்கரையை அறியும் முறைகள்
ஒருவருக்கு 'தாழ்நிலை சர்க்கரை' உள்ளதா என அறிய
தள்ளாடுதல்
இதயத்துடிப்பு அதிகமாக இருப்பது (மூச்சு இறைப்பது)
அதிக வியர்வை வெளிப்படுதல்
பரபரப்பாகவும் படபடப்பாகவும் இருத்தல்
தலைச்சுற்றல் உண்டாதல்
பசி அதிகம் ஏற்படுதல்
கண் பார்வை மங்குதல்
சோர்வும் களைப்பும் உண்டாதல்
தலைவலி உண்டாதல்
எரிச்சல், ஆத்திரம் ஏற்படுதல்
மயக்க நிலை ஏற்படுதல்
போன்ற அறிகுறிகளில் ஒன்றோ, பலவோ இருப்பதாக உணர்ந்தால், அவருக்குத் தாழ்நிலை சர்க்கரை இருக்கலாம் என்ற எச்சரிக்கை உணர்வை அவர் அடைய வேண்டும்.

 

தாழ்நிலை சர்க்கரை – பக்கவிளைவுகள்
நீரிழிவுநோய் உடையவருக்கு அவ்வப்போது தாழ்நிலை சர்க்கரை ஏற்படும். தாழ்நிலை சர்க்கரை ஏற்படும்போது அதன் பக்க விளைவுகளாக அவர்களுக்கு,
உடல் எடை அதிகரிக்கும்
அவர்களுக்கு கை, கால்களில் வீக்கம் ஏற்படும்.
அவர்களுக்கு இரத்தசோகை நோய் ஏற்படும்
அவர்களுக்கு மஞ்சள் காமாலை நோய் வரலாம்

இந்த அறிகுறிகள் இருப்பதாக அறிந்தால் உடனே மருத்துவரை அணுகிப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். உரிய சிகிச்சையை பெற வேண்டும்.

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு சிலருக்கு, இரவு நேரங்களில் தூக்கத்திலேயே தாழ்நிலை சர்க்கரை ஏற்படும். இந்நிலை, மயக்க நிலையை (கோமா நிலையை) ஏற்படுத்தும். அவர்கள் தூங்கும்போதே கூட இறந்துபோக நேரிடலாம்.

இந்நிலை மிகவும் அபாயகரமானது; எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் உறங்கச் செல்வதற்கு முன்பாக சிறு உணவு பால், ஸ்னாக்ஸ் போன்றவற்றில் சிறிது உட்கொள்ள வேண்டும். இதனால் தாழ்நிலை சர்க்கரை ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை.

அதிகாலை எழுந்திருக்கும்போதே கூட சிலருக்கு தாழ்நிலை சர்க்கரை ஏற்படும். அவர்கள் உடனே நடை பயிற்சி அல்லது ஏதேனும் வேலைகளைச் செய்யக்கூடாது. ஏதேனும் சிறிது சாப்பிட்டு (அ) பால் அருந்திவிட்டுத் தம் பணிகளைத் தொடங்க வேண்டும்.

நன்றி : டாக்டர் வேணு புருஷோத்தமன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...