“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)

 நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். இந்நிலையை 'தாழ்நிலை சர்க்கரை' என்று குறிப்பிடுவர்.

பொதுவாக இரத்தத்தில் சர்க்கரையின் அளவு 60க்கும் குறைவாக (Blood Sugar Level <60) வரும்போது, ஒருவருக்குத் தாழ்நிலைச் சர்க்கரை உள்ளதாகச் சொல்லலாம்.

தாழ்நிலை சர்க்கரை ஏற்படக் காரணங்கள்
அவர் குறைவாக சாப்பிடுவதால்
அவர் உடலில் இன்சுலின் அதிகமாகச் சுரப்பதால்
அவர் நீரிழிவுநோயைக் கட்டுப்படுத்த எடுத்துக் கொள்ளும் மருந்துகளின் அளவு அதிகமாகிவிடும்போது.
அவர் அதிக அளவில் உடற்பயிற்சி செய்வது போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

தாழ்நிலை சர்க்கரையை அறியும் முறைகள்
ஒருவருக்கு 'தாழ்நிலை சர்க்கரை' உள்ளதா என அறிய
தள்ளாடுதல்
இதயத்துடிப்பு அதிகமாக இருப்பது (மூச்சு இறைப்பது)
அதிக வியர்வை வெளிப்படுதல்
பரபரப்பாகவும் படபடப்பாகவும் இருத்தல்
தலைச்சுற்றல் உண்டாதல்
பசி அதிகம் ஏற்படுதல்
கண் பார்வை மங்குதல்
சோர்வும் களைப்பும் உண்டாதல்
தலைவலி உண்டாதல்
எரிச்சல், ஆத்திரம் ஏற்படுதல்
மயக்க நிலை ஏற்படுதல்
போன்ற அறிகுறிகளில் ஒன்றோ, பலவோ இருப்பதாக உணர்ந்தால், அவருக்குத் தாழ்நிலை சர்க்கரை இருக்கலாம் என்ற எச்சரிக்கை உணர்வை அவர் அடைய வேண்டும்.

 

தாழ்நிலை சர்க்கரை – பக்கவிளைவுகள்
நீரிழிவுநோய் உடையவருக்கு அவ்வப்போது தாழ்நிலை சர்க்கரை ஏற்படும். தாழ்நிலை சர்க்கரை ஏற்படும்போது அதன் பக்க விளைவுகளாக அவர்களுக்கு,
உடல் எடை அதிகரிக்கும்
அவர்களுக்கு கை, கால்களில் வீக்கம் ஏற்படும்.
அவர்களுக்கு இரத்தசோகை நோய் ஏற்படும்
அவர்களுக்கு மஞ்சள் காமாலை நோய் வரலாம்

இந்த அறிகுறிகள் இருப்பதாக அறிந்தால் உடனே மருத்துவரை அணுகிப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். உரிய சிகிச்சையை பெற வேண்டும்.

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு சிலருக்கு, இரவு நேரங்களில் தூக்கத்திலேயே தாழ்நிலை சர்க்கரை ஏற்படும். இந்நிலை, மயக்க நிலையை (கோமா நிலையை) ஏற்படுத்தும். அவர்கள் தூங்கும்போதே கூட இறந்துபோக நேரிடலாம்.

இந்நிலை மிகவும் அபாயகரமானது; எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் உறங்கச் செல்வதற்கு முன்பாக சிறு உணவு பால், ஸ்னாக்ஸ் போன்றவற்றில் சிறிது உட்கொள்ள வேண்டும். இதனால் தாழ்நிலை சர்க்கரை ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை.

அதிகாலை எழுந்திருக்கும்போதே கூட சிலருக்கு தாழ்நிலை சர்க்கரை ஏற்படும். அவர்கள் உடனே நடை பயிற்சி அல்லது ஏதேனும் வேலைகளைச் செய்யக்கூடாது. ஏதேனும் சிறிது சாப்பிட்டு (அ) பால் அருந்திவிட்டுத் தம் பணிகளைத் தொடங்க வேண்டும்.

நன்றி : டாக்டர் வேணு புருஷோத்தமன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

மருத்துவ செய்திகள்

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...