“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)

 நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். இந்நிலையை 'தாழ்நிலை சர்க்கரை' என்று குறிப்பிடுவர்.

பொதுவாக இரத்தத்தில் சர்க்கரையின் அளவு 60க்கும் குறைவாக (Blood Sugar Level <60) வரும்போது, ஒருவருக்குத் தாழ்நிலைச் சர்க்கரை உள்ளதாகச் சொல்லலாம்.

தாழ்நிலை சர்க்கரை ஏற்படக் காரணங்கள்
அவர் குறைவாக சாப்பிடுவதால்
அவர் உடலில் இன்சுலின் அதிகமாகச் சுரப்பதால்
அவர் நீரிழிவுநோயைக் கட்டுப்படுத்த எடுத்துக் கொள்ளும் மருந்துகளின் அளவு அதிகமாகிவிடும்போது.
அவர் அதிக அளவில் உடற்பயிற்சி செய்வது போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

தாழ்நிலை சர்க்கரையை அறியும் முறைகள்
ஒருவருக்கு 'தாழ்நிலை சர்க்கரை' உள்ளதா என அறிய
தள்ளாடுதல்
இதயத்துடிப்பு அதிகமாக இருப்பது (மூச்சு இறைப்பது)
அதிக வியர்வை வெளிப்படுதல்
பரபரப்பாகவும் படபடப்பாகவும் இருத்தல்
தலைச்சுற்றல் உண்டாதல்
பசி அதிகம் ஏற்படுதல்
கண் பார்வை மங்குதல்
சோர்வும் களைப்பும் உண்டாதல்
தலைவலி உண்டாதல்
எரிச்சல், ஆத்திரம் ஏற்படுதல்
மயக்க நிலை ஏற்படுதல்
போன்ற அறிகுறிகளில் ஒன்றோ, பலவோ இருப்பதாக உணர்ந்தால், அவருக்குத் தாழ்நிலை சர்க்கரை இருக்கலாம் என்ற எச்சரிக்கை உணர்வை அவர் அடைய வேண்டும்.

 

தாழ்நிலை சர்க்கரை – பக்கவிளைவுகள்
நீரிழிவுநோய் உடையவருக்கு அவ்வப்போது தாழ்நிலை சர்க்கரை ஏற்படும். தாழ்நிலை சர்க்கரை ஏற்படும்போது அதன் பக்க விளைவுகளாக அவர்களுக்கு,
உடல் எடை அதிகரிக்கும்
அவர்களுக்கு கை, கால்களில் வீக்கம் ஏற்படும்.
அவர்களுக்கு இரத்தசோகை நோய் ஏற்படும்
அவர்களுக்கு மஞ்சள் காமாலை நோய் வரலாம்

இந்த அறிகுறிகள் இருப்பதாக அறிந்தால் உடனே மருத்துவரை அணுகிப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். உரிய சிகிச்சையை பெற வேண்டும்.

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு சிலருக்கு, இரவு நேரங்களில் தூக்கத்திலேயே தாழ்நிலை சர்க்கரை ஏற்படும். இந்நிலை, மயக்க நிலையை (கோமா நிலையை) ஏற்படுத்தும். அவர்கள் தூங்கும்போதே கூட இறந்துபோக நேரிடலாம்.

இந்நிலை மிகவும் அபாயகரமானது; எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் உறங்கச் செல்வதற்கு முன்பாக சிறு உணவு பால், ஸ்னாக்ஸ் போன்றவற்றில் சிறிது உட்கொள்ள வேண்டும். இதனால் தாழ்நிலை சர்க்கரை ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை.

அதிகாலை எழுந்திருக்கும்போதே கூட சிலருக்கு தாழ்நிலை சர்க்கரை ஏற்படும். அவர்கள் உடனே நடை பயிற்சி அல்லது ஏதேனும் வேலைகளைச் செய்யக்கூடாது. ஏதேனும் சிறிது சாப்பிட்டு (அ) பால் அருந்திவிட்டுத் தம் பணிகளைத் தொடங்க வேண்டும்.

நன்றி : டாக்டர் வேணு புருஷோத்தமன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...