சுஷ்மா சுவராஜுக்கு பிரதமர் நரேந்திர மோடி, ராஜ்நாத்சிங் பாராட்டு

ஐக்கிய நாடுகள்சபையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய வெளியுறவுதுறை மந்திரி சுஷ்மா சுவராஜுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் பேசிய சுஷ்மா சுவராஜ், இந்தியா அறிஞர்களையும், டாக்டர்களையும், உருவாக்குகிறது. ஆனால் பாகிஸ்தான் தீவிரவாதிகளை உருவாக்குகிறது. இன்றைய 21-ம் நூற்றாண்டில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஐ.நா.சபை மாற்றியமைக்கப் பட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்நிலையில், ஐ.நாவில் சுஷ்மா சுவராஜின் பேச்சுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் பாராட்டுதெரிவித்துள்ளார். ஐ.நா.வில் தீவிரவாதத்தின் அச்சுறுத்தல்குறித்து தனது கருத்தை சுஷ்மா ஜி வலிமையாக பதிவுசெய்துள்ளார். அவரது உரையால் இந்தியா உலக அரங்கில் பெருமைபெற்றுள்ளது என பதிவிட்டுள்ளார்.

இதேபோல், உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கும் சுஷ்மா சுவராஜ் பேச்சுக்கு டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். ஐ.நா.வில் பாகிஸ்தானின் தீவிரவாதத்தை நன்குவெளிப்படுத்தி உள்ளீர்கள். உங்களுக்கு வாழ்த்துக்கள். தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலையை வெளிப் படுத்தியதற்கு பாராட்டுக்கள் என பதிவிட்டுள்ளார்.
 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...