சென்னையை அடுத்த கிழக்குதாம்பரத்தில் 1942ல் நேஷனல் பள்ளி தொடங்கப்பட்டது. இந்தபள்ளியில் 1979ல் முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி கலந்து கொண்டு புதியகட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், 75ம் ஆண்டு விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என பள்ளி தாளாளரும் பாஜக முன்னாள் மாநில தலைவருமான நாராயணராவ் அத்வானிக்கு அழைப்புவிடுத்திருந்தார். அதை ஏற்று பள்ளி விழாவில் அத்வானி நேற்று கலந்து கொண்டார். விழாவில் பேசிய அத்வானி கூறுகையில், ‘‘இந்தபள்ளியில் 1979ல் நான் வரும்போது 200 மாணவர்கள் இருந்தனர். தற்போது 75ம் ஆண்டு விழாவில் ஆயிரக் கணக்கான மாணவர்கள் இங்கு கல்வி பயில்வது மிகுந்த மகிழ்ச்சி யளிக்கிறது. சிறந்த மாணவர்களை இந்த கல்விநிலையம் உருவாக்கி இருக்கிறது.
மாணவர்களை இந்தவிழாவில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி யடைகிறேன். சிறப்பாக பள்ளியை நடத்திவரும் பள்ளி செயலர் நாராயணராவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்’’ என தெரிவித்தார்.
பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ... |
அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ... |
தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே இல்லை. மேலும் தண்ணீர் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.