இந்தியா பலவித சவால்களை எதிர்நோக்கி உள்ளது. ஆனால் அதனைக்கண்டு ஓடவில்லை. ஒன்றாக இணைந்து அதனை எதிர்கொள்வோம். காந்தியின் தூய்மை இந்தியா கனவை நனவாக்கி உள்ளோம். 1000 காந்திகளாலும், ஒருலட்சம் நரேந்திர மோடிகளாலும், அனைத்து முதல்வர்களாலும், அரசு துறைகள் ஒன்றிணைந்தாலும் உண்மையான தூய்மை இந்தியாவை கொண்டுவர முடியாது. இது 125 கோடி இந்தியர்களால் மட்டுமே முடியும்.
தூய்மை இந்தியா திட்டத்தால் நேர்மறை எண்ணங்கள் தோன்றிஉள்ளன. இப்போது இந்தியமக்கள் அனைவரும் தூய்மை இந்தியா திட்டத்தின் பின்னால்வர துவங்கி உள்ளனர். அவர்களின் வீடுகளை மட்டுமின்றி, சுற்றுப் புறத்தை தூய்மைப் படுத்துவதிலும் உதவதுவங்கி உள்ளனர். தூய்மை இந்தியா திட்டம் துவங்கப்பட்டபோது பலரும் அதனை விமர்சித்தனர். ஆனால் இப்போது, 3 ஆண்டுகளுக்கு பிறகு அதுதொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
நான் இப்போதும் சொல்கிறேன், இது ஆரம்பம்தான். இந்த திட்டத்தின் மூலம் தொடர்ந்து மிகப்பெரிய மாற்றத்திற்கு இது தூண்டுகோலாக இருக்கும். இத்திட்டத்தில் பங்குபெறாதவர்களே இதனை விமர்சிக்கிறார்கள். ஆனால் இத்திட்டத்தில் இணைய நாட்டுமக்கள் முடிவு செய்து விட்டனர். தூய்மையேசேவை திட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இவ்வாறு மோடி பேசி உள்ளார்.
தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ... |
பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ... |
நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.