கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த பித்தம், பிரமேகம், மதரோகம் போன்ற நோய்கள் குணமாகும்.
இந்தப் பழம் உட்கொள்வதன் மூலம் ஆரோக்கியத்தைப் பெற்றுத் திகழலாம். நன்கு பழுத்த இனிப்பு நிறைந்த கொடிமுந்திரிப் பழம்தான் நல்ல ஜீரண சக்தியை உண்டு பண்ணும். மலச் சிக்கலைப் போக்கும். தாகத்தைத் தணிக்கும். இரத்தத்தைச் சிறக்கச் செய்யும்.'
குழந்தைகளுக்கு இந்தப் பழத்தின் சாற்றைக் கொடுத்து வர வேண்டும். பல் முளைக்கும்போது இந்தப் பழத்தின் சாரைக் கொடுத்துவந்தால் மலச்சிக்கலைப் போக்கும்.
இருதயப் பலவீனத்தைப் போக்குவதற்குப் பெரிதும் உதவும் இந்தப் பழம் தீராத தலைவலியையும் காக்காய் வலிப்பு நோயையும் குணப்படுத்தும் ஆற்றலுள்ளதாகும்.
புற்றுநோயைக் குணப்படுத்தும் ஆற்றல் பெற்ற தாகவும் இது திகழ்கிறது. காசநோய், மற்றும் தொண்டை சம்பந்தப்பட்ட நோய்களையும் குணப்படுத்துகிறது. உடற்பருமனைக் குறைக்கவும் உற்ற பழமாக இது விளங்குகிறது.
தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ... |
அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது. |
முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.