இந்தியவரலாறு இருக்கும் வரை சர்தார் வல்லபாய் பட்டேலின் தியாகம் நினைவு கூறப்படும்

இன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கியதில் முக்கிய பங்காற்றிய, இரும்பு மனிதர் என்றழைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த தினம் நாடுமுழுவதும்  நேற்று கொண்டாடப் பட்டது . இதனையடுத்து டெல்லியில் அமைந்துள்ள சர்தார் பட்டேல் சவுக்கில், வல்லபாய் பட்டேலின் சிலைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்ட பலர் மலர் தூவிமரியாதை செலுத்தினர். பின்னர் பிரதமர் மோடி டெல்லி தயான்சந்த் மைதானத்தில் ஒற்றுமைக்கான ஓட்டத்தைத் துவக்கிவைத்தார். இந்த ஓட்டத்தில் பொது மக்கள், அரசு அதிகாரிகள் என 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

ஓட்டத்தை துவக்கிவைக்கம் முன் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இந்தஓட்டத்தில் கலந்துகொள்ள வந்திருக்கும் இளைஞர்களைப் பார்ப் பத்தில் மகிழ்சியாக இருப்பதாக தெரிவித்தார். இன்று சர்தார் வல்லபாய்பட்டேல் பிறந்ததினம். இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்னும், சுதந்திரம் அடைந்த பின்னரும் பட்டேல் நாட்டுக்கு ஆற்றிய பங்களிப்பை நினைத்து ஒவ்வொருவரும் பெருமைப்பட வேண்டும் என்றார். ஏனெனில் இன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்குவதற்கு அவர் அரும்பாடுபட்டார். அதனால்தான் அவரது பங்களிப்பை இன்றைய இளம் தலைமுறையினர் மதிக்கின்றனர் என்றார். ஆனால் சர்தார் படேலின் பங்களிப்பை புறக்கணிக்கவும், மறைக்கவும் முயற்சி நடைபெற்றதாக சாடினார். இந்தியவரலாறு இருக்கும் வரை சர்தார் வல்லபாய் பட்டேலின் தியாகம் நினைவு கூறப்படும் என்றார். பன்முகத் தன்மை கொண்ட நமது நாடு வேற்றுமையில் ஒற்றுமை என்னும் பண்பில் சிறந்து விளங்குவதாக குறிப்பிட்டார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...