சுதந்திர வரலாற்றை தெரிந்து கொல்வதன் வாயிலாக தேச பக்தியை வளர்த்தெடுப்போம்

நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் நீத்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை போற்றிடும் விதமாக “என் மண் என் தேசம்” என்ற இயக்கம் தொடங்கப்படும் என்று தனது 103 வது மனதின் குரல் நிகழ்ச்சியின் வாயிலாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். அதாவது நாடு முழுவதும் பட்டிதொட்டிகளிலிருந்து 7500 கலசங்களில் மண் நிரப்பப்பட்டும், மரக்கன்றுகள் சேகரிக்கப்பட்டும் அமுதக்கலச யாத்திரை மேற்கொள்ளப்பட இருக்கிறது நிறைவாக சேகரிக்கப்பட்ட மண் மற்றும் மரக்கன்றுகளை கொண்டு புதுடில்லியின் தேசியப் போர் நினைவுச் சின்னத்திற்கு அருகே, ‘அமுதப்பூங்கா’ அமைக்கப்பட உள்ளது. தேசபக்தி மற்றும் தேசிய ஒருமைபாட்டுக்கான அடையாளங்களுள் ஒன்றாக இது இருக்க போவது உறுதி.

இதைப் போன்று நரேந்திர மோடி குஜராத் முதல்வராக அக்டோபர்-31-2013 அன்று, இந்திய விடுதலை இயக்க தலைவர்களில் ஒருவரும், முதல் உள்துறை அமைச்சரும், இந்திய சுதந்திரத்தின் போது இந்தியாவுடன் இணைய மறுத்து நாடு முழுவதும் சிதறி கிடந்த 500க்கும் அதிகமான சமஸ்தானங்களை இரும்பு கரம் கொண்டு இணைத்த இரும்பு மனிதருமான சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு சிலை அமைத்திட அடிக்கல் நாட்டினார். அதற்கு இந்திய ஒற்றுமை சிலை என பெயரிட்டு, நாடு முழுவதும் நான்கு லட்சத்திற்கும் அதிகமான கிராமங்களில் விவசாயிகளிடமிருந்தும் அவர்கள் பயன்படுத்தாத இரும்புக் கருவிகளை நன்கொடையாக பெற்று, அதை கொண்டு சிலை வடித்து பாரத பிரதமராக அக்டோபர்-31-2018 அன்று அதை திறந்தும் வைத்தார்.

அயோத்தியில் ஸ்ரீ ராமனுக்கு ஆலையம் எழுப்ப நாடு முழுவதிலுமிருந்துஜாதி, மதங்களை கடந்து செங்கல் பெறப்பட்டு கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது.

தேசியமோ, தெய்வீகமோ எதுவாயினும் நாட்டின் நன்மைக்கு, வளர்ச்சிக்கு தேசிய ஒருமைப்பாடு மிக அவசியம் என்பதற்கான சான்றுகள் இவை. மத,ஜாதி, மொழி மற்றும் மாநிலங்களுக் இடையேயான பேதங்கள் மக்களை முக்கிய விஷயங்களில் இருந்து திசைதிருப்பி விடுகிறது. நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் செயல்களில் அவர்களை அறியாமலேயே அவர்களை ஈடுபட செய்துவிடுகிறது. தேசம் முழுவதும் ஒரே மாதிரியான மனோபாவங்களை வளர்த்தெடுப்பதன் வாயிலாக மட்டுமே இதற்கு தீர்வு காண இயலும். அதை தேசபக்தியை வளர்ப்பதன் வாயிலாகவும், சுதந்திர போராட்ட வீரர்களின் தியாக வரலாறை தெரிந்து கொள்வதன் வாயிலாக மட்டுமே வென்றெடுக்க முடியும்.

நன்றி; தமிழ்தாமரை வி.எம் வெங்கடேஷ்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...