சுதந்திர வரலாற்றை தெரிந்து கொல்வதன் வாயிலாக தேச பக்தியை வளர்த்தெடுப்போம்

நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் நீத்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை போற்றிடும் விதமாக “என் மண் என் தேசம்” என்ற இயக்கம் தொடங்கப்படும் என்று தனது 103 வது மனதின் குரல் நிகழ்ச்சியின் வாயிலாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். அதாவது நாடு முழுவதும் பட்டிதொட்டிகளிலிருந்து 7500 கலசங்களில் மண் நிரப்பப்பட்டும், மரக்கன்றுகள் சேகரிக்கப்பட்டும் அமுதக்கலச யாத்திரை மேற்கொள்ளப்பட இருக்கிறது நிறைவாக சேகரிக்கப்பட்ட மண் மற்றும் மரக்கன்றுகளை கொண்டு புதுடில்லியின் தேசியப் போர் நினைவுச் சின்னத்திற்கு அருகே, ‘அமுதப்பூங்கா’ அமைக்கப்பட உள்ளது. தேசபக்தி மற்றும் தேசிய ஒருமைபாட்டுக்கான அடையாளங்களுள் ஒன்றாக இது இருக்க போவது உறுதி.

இதைப் போன்று நரேந்திர மோடி குஜராத் முதல்வராக அக்டோபர்-31-2013 அன்று, இந்திய விடுதலை இயக்க தலைவர்களில் ஒருவரும், முதல் உள்துறை அமைச்சரும், இந்திய சுதந்திரத்தின் போது இந்தியாவுடன் இணைய மறுத்து நாடு முழுவதும் சிதறி கிடந்த 500க்கும் அதிகமான சமஸ்தானங்களை இரும்பு கரம் கொண்டு இணைத்த இரும்பு மனிதருமான சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு சிலை அமைத்திட அடிக்கல் நாட்டினார். அதற்கு இந்திய ஒற்றுமை சிலை என பெயரிட்டு, நாடு முழுவதும் நான்கு லட்சத்திற்கும் அதிகமான கிராமங்களில் விவசாயிகளிடமிருந்தும் அவர்கள் பயன்படுத்தாத இரும்புக் கருவிகளை நன்கொடையாக பெற்று, அதை கொண்டு சிலை வடித்து பாரத பிரதமராக அக்டோபர்-31-2018 அன்று அதை திறந்தும் வைத்தார்.

அயோத்தியில் ஸ்ரீ ராமனுக்கு ஆலையம் எழுப்ப நாடு முழுவதிலுமிருந்துஜாதி, மதங்களை கடந்து செங்கல் பெறப்பட்டு கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது.

தேசியமோ, தெய்வீகமோ எதுவாயினும் நாட்டின் நன்மைக்கு, வளர்ச்சிக்கு தேசிய ஒருமைப்பாடு மிக அவசியம் என்பதற்கான சான்றுகள் இவை. மத,ஜாதி, மொழி மற்றும் மாநிலங்களுக் இடையேயான பேதங்கள் மக்களை முக்கிய விஷயங்களில் இருந்து திசைதிருப்பி விடுகிறது. நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் செயல்களில் அவர்களை அறியாமலேயே அவர்களை ஈடுபட செய்துவிடுகிறது. தேசம் முழுவதும் ஒரே மாதிரியான மனோபாவங்களை வளர்த்தெடுப்பதன் வாயிலாக மட்டுமே இதற்கு தீர்வு காண இயலும். அதை தேசபக்தியை வளர்ப்பதன் வாயிலாகவும், சுதந்திர போராட்ட வீரர்களின் தியாக வரலாறை தெரிந்து கொள்வதன் வாயிலாக மட்டுமே வென்றெடுக்க முடியும்.

நன்றி; தமிழ்தாமரை வி.எம் வெங்கடேஷ்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...