சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு: இவாங்கா டிரம்ப் வருகை

சர்வதேச தொழில்முனைவோர் மாநாடு வருகிற 28-ந்தேதி ஐதராபத்தில் நடைபெறுகிறது. மாநாட்டை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைக்கிறார்.

இம்மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் கலந்து கொள்கிறார். அமெரிக்க தொழில் முனைவோர் குழுவுக்கு இவர் தலைமைதாங்கி அழைத்து வருகிறார். ஐதராபாத்தில் இவர் 3 நாட்கள் தங்குகிறார்.

இவாங்கா டிரம்ப் வருகையை யொட்டி ஐதராபாத்தில் பலத்தபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஐதராபாத்தில் தங்கும் இவாங்கா டிரம்புக்கு 5 அடுக்கு பாதுகாப்பு கொடுக்கப் படுகிறது. முதல் 2 அடுக்குகளில் அமெரிக்க ரகசியபோலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

இந்திய சிறப்பு பாதுகாப்பு படையினர் 3-வது அடுக்குபாதுகாப்பை கவனிக்கின்றனர். அதையடுத்து 4 மற்றும் 5-வது அடுக்குபாதுகாப்பில் தெலுங்கானா உளவுப்பிரிவு பாதுகாப்பு போலீசார் ஈடுபடுகின்றனர். இவர்கள் தீவிரவாத தடுப்புபயிற்சி மேற்கொண்டவர்கள்.

இவாங்காவுக்கு மிரட்டல்கள் இருப்பதால் சர்வதேச தொழில்முனைவோர் மாநாடு நடைபெறும் இடத்தில் 3 கி.மீ சுற்றளவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. இவர் வெஸ்டின் ஓட்டலில் தங்க ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. இது மாநாடு நடைபெறும் இடத்தின் அருகே உள்ளது.

அதேநேரத்தில் வரலாற்று சிறப்புமிக்க பலாக்னுமா அரண்மனையிலும் தங்கவாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. ஆனால் அது உறுதியாக தெரியவில்லை. ஆனால் இங்கு தெலுங்கானா அரசு சார்பில் இவருக்கு முதல்-மந்திரி சந்திரசேகரராவ் விருந்து அளிக்கிறார். அதற்காக இந்த அரண்மனை ஓட்டல் போன்று மாற்றப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளைதான் ஓட்டல் நிர்வாகம் செய்துள்ளது.

இவாங்கா வருகையையொட்டி அமெரிக்காவின் ரகசியபோலீஸ் குழு பல தடவை ஐதராபாத் வந்து ஓட்டல்கள், மாநாடு நடைபெறும் இடம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வுசெய்தனர்.

ஐதராபாத்தில் இவாங்கா டிரம்ப் பயணம்செய்ய அமெரிக்க உளவுப்படை குண்டு துளைக்காத புல்லட்‘புரூப்’ கார்களை கொண்டுவருகிறது. துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும், பயிற்சி பெற்ற மோப்ப நாய்களும் வரவழைக்கப் படுகின்றன. மொத்தத்தில் அமெரிக்க அதிபருக்குரிய பாதுகாப்பு வழங்கப்படுவதாக இந்தியாவுக்கான அமெரிக்கதூதர் தெரிவித்தார்.

ஐதராபாத்தில் தங்கும் இவாங்கா சார்மினார், லாட்பஜார் உள்ளிட்ட இடங்களுக்கு செல்கிறார். பிரதமர் மோடியுடன் விருந்தில் பங்கேற்கிறார். மேலும் அவர் வரலாற்று சிறப்புமிக்க கோல்கோண்டா கோட்டைபகுதிக்கு சென்று ஷாப்பிங் செய்வார் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் அது உறுதி செய்யப்படவில்லை.

அமெரிக்க அதிபர் டிரம்ப்மகள் வருகையையொட்டி ஐதராபாத் ரோட்டில் நடமாடும் பிச்சைக் காரர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வேறு இடத்துக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...