வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

 வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் சுத்தப் படுத்தும்.

டெங்கு ஜுரம் வராமல் தடுக்க
வேப்ப இலைக் கொழுந்து, முடக்கற்றான், சுண்டைக்காய், மணத்தக்காளி, சுண்டை வற்றல் ஆகியவற்றை நெய் (அ) ஆமணக்கெண்ணெய் சேர்த்து வதக்கி வாரம் இரண்டு அல்லது மூன்று முறை உணவு போல் உண்ண வேண்டும்.

பூரான் கடி குணமாக
வேம்பின் பூவை தண்ணீர் விட்டு அரைத்துக் கறி செய்து உருட்டி உருண்டையாகச் செய்து சாப்பிட்டு வர பூரான் கடி, அரிப்பு ஆகிய பிணிகள் குணமாகும்.

பொடுகு, அரிப்பு, சொறி, ரணங்கள் குணமாக
வேப்ப பூக்களைச் சேகரித்து சுத்தம் பார்த்து 100 கிராம் எடுத்து மண்சட்டியில் இடவும். 200 மில்லி தண்ணீரில் 50 கிராம் வெல்லத்தைக் கரைத்து ஊற்றி ஏறக்குறைய ஒரு மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.
பின்பு 200 மில்லி நல்லெண்ணெயை ஊற்றி எரியும் அடுப்பில் வைத்து தைலப் பதத்திற்கு வருமளவிற்கு காய்ச்சவும்.வடிகட்டி தலையில் தேய்த்து வர பொடுகு, அரிப்பு, சொறி, ரணங்கள் முதலியவை நீங்கி குணமாகும்.

தலைவலி, காதுவலி நீங்க
கொதிக்க வைத்த நீரில் வேப்பம் பூக்களைப் போட்டு ஆவி பிடித்தால் தலைவலி, காது வலி நீங்கும். பித்த வாதத்தைப் போக்கும்.

பித்த வயிற்றுவலி
பித்தம் அதிகரித்தால் வயிற்றுவலி சிலருக்கு வரும். இந்த வயிற்று வலிக்குத் தகுந்த சிகிச்சை அளிக்காவிட்டால் இந்நோய் பூரணமாகத் தங்கிவிடும்.

புதிய வேப்பம்பூவை சுத்தம் செய்து இரண்டு ஆழாக்கு நீரில் இரவு அடுப்பில் சூடு செய்து வைத்துவிடுதல் வேண்டும். காலையில் எழுந்ததும், அடுப்பில் இருக்கும் கசாயத்தில் 4ல் ஒரு பங்கு குடிக்க வேண்டும். பின் 3 மணிநேரம் சென்ற பின்னர் மூன்றில் ஒரு பங்கைக் குடித்தல் வேண்டும். பின் நான்கு மணிநேரத்திற்குப் பின் இரண்டில் ஒரு பங்கைக் குடிக்க வேண்டும். மீண்டும் மீதமிருக்கும் கஷாயத்தை மாலையில் குடித்து விடுதல் வேண்டும்

இம்முறையை ஒரு வாரம் தொடர்ந்து செய்து வர குன்மம் என்னும் வயிற்றுவலி பூரணமாக நீங்கும்.

கட்டிகள் உடைய
வேப்பம் பூவையும், எண்ணெயையும் சேர்த்து அரைத்துக் கட்டிகளின் மேல் வைத்துக் கட்டிவர வெகு விரைவிலேயே எவ்வளவு கொடிய கட்டிகளானாலும் உடையும்.

அஜீரணக் கோளாறுகள்
பித்தம் தொடர்பான எல்லாவிதமான பிணிகளையும், தீவிரமாகவும், துரிதமாகவும் விரட்டும் மகத்துவம் வேப்பம் பூவிற்கு உண்டு.

வெப்பம் பூவையும், நில வேம்பையும் சேர்த்துக் கசாயம் வைத்துச் சாப்பிட அஜீரணக் கோளாறுகள் நீங்கி, நல்ல பசி எடுக்கும்.

வயிற்றுக் கிருமிகள் நீங்க
வேப்பம்பூவுடன், மிளகு, சிறிது உப்புச் சேர்த்து அரைத்து வயது வந்தவர்களுக்கு சுண்டைக்காய் அளவும், குழந்தைகளுக்கு 1 முதல் 2 பட்டாணி அளவும்; தினசரி காலை, மாலை இருவேளையும் உள்ளுக்குள் கொடுத்துவர, வயிற்றில் உள்ள அனைத்துக் கிருமிகளும் சாகும்.

இந்த மருந்து உருண்டையை நீரில் கரைத்தும் உட்கொள்ளக் கொடுக்கலாம்.

இந்நோய்க்கு வேப்பம்பூவுக்குப் பதில் வேப்பந்தளிரையும் பயன்படுத்தலாம்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

பொக்ரானில் முப்படை போர் பயிற்ச ...

பொக்ரானில் முப்படை போர் பயிற்சி: பிரதமர் நேரில் பார்வை ராஜஸ்தான் பொக்ரானில் இன்று 'பாரத் ஷக்தி' என்ற உள்நாட்டில் ...

இது தான் ஒரு தேசத்தின் கவுரவம்

இது தான் ஒரு தேசத்தின் கவுரவம் '' ஐ.நா., விவாதத்தில் எங்களிடம் இருந்து கச்சாஎண்ணெய் வாங்குவது ...

திமுகவின் வெறுப்புப் பேச்சு

திமுகவின்  வெறுப்புப் பேச்சு திமுக எம்பி. ஆ.ராசா ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகையில் ‘இந்தியா ...

மருத்துவ செய்திகள்

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...