ரஜினி அரசியலில் ஈடுபடுவதும், கட்சிதொடங்குவதும் அவரது சொந்த முடிவு

ரஜினி அரசியலில் குதித்து இருப்பதன் பின்னணியில் பா.ஜ.க இருப்பதாக குற்றம் சாட்டப்படுவதை தமிழக பா.ஜ.க தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் மறுத்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

ரஜினி அரசியலில் ஈடுபடுவதும், கட்சிதொடங்குவதும் அவரது சொந்த முடிவு. இதில் பா.ஜனதாவுக்கு எந்ததொடர்பும் இல்லை.

யாரும் பின்னணியில் இருந்து இயக்கவேண்டிய நிலையில் ரஜினி இல்லை. பா.ஜனதாவுக்கும் எந்தகட்சிக்கும் பின்னால் இருந்து செயல்பட வேண்டிய அவசியம் இல்லை.

அதிமுக. பிளவுபட்டபோதும் பா.ஜனதாதான் இயக்குகிறது என்றார்கள். மோடி, கலைஞர் வீட்டுக்கு மரியாதை நிமித்தமாக சென்றதையும் தவறாக விமர்சிக்கிறார்கள். திமுக. வுடன் கூட்டணி அமைக்கப் போவதாக சொல்கிறார்கள்.

தமிழகத்தின் அரசியல் நிலைமை இதுதான். பா.ஜனதா வளர்ந்துவிட கூடாது. வந்துவிடகூடாது என்ற ஒற்றை நோக்கத்தை தவிர இவர்களுக்கு வேறு எந்த எண்ணமும் இல்லை.

ஊழல் எதிர்ப்பு, ஆன்மீக அரசியல் என்று ரஜினி குறிப்பி ட்டுள்ளார். நாங்களும் ஊழலை எதிர்ப்பவர்கள். ஆன்மீக அரசியல்வேண்டும் என்று விரும்புபவர்கள். எனவே ரஜினியின் புதியகோணத்திலான அரசியலை வரவேற்கிறோம்.

ஆன்மீகம் வேறு. மதவாதம் வேறு. ஆன்மீகம் என்பது எல்லா மதத்துக்கும் பொதுவானது. நாத்திகம் என்ற பெயரில் ஆத்திகத்தை சிதைக்க நடக்கும் முயற்சியால் கட்டுப்பாடு, தர்மம் எல்லாம் சிதைக்கப் பட்டு வருவதால் நடக்கும் சமூக அவலங்களை எல்லோரும் பார்க்கிறோம். எனவேதான் ஆன்மீக அரசியல் தேவை என்று கருதுகிறோம். ஆதரிக்கிறோம்.

தனியாக ஹஜ் புனிதயாத்திரை மேற்கொள்ளும் பெண்களுக்கு சலுகைகள் வழங்கியது பா.ஜனதா தானே. நாங்கள் மதவாதத்தை எதிர்க்கிறோம். ஆன்மீகத்தை ஆதரிக்கிறோம்.

இந்துமத தலைவர் ஒருவர் பா.ஜனதாவில் சேர்ந்து விட்டால் உடனே காவிதீவிரவாதம் பார்த்தீர்களா என்று வசைபாடுகிறார்கள். முத்தலாக்குக்கு எதிராக வழக்கு தொடர்ந்த இஸ்லாமிய பெண்மணி பா.ஜனதாவில் சேர்ந்து இருக்கிறோரே. இதற்கு என்னசொல்ல போகிறார்கள்?

எது நடந்தாலும் பா.ஜனதா மீது பழிபோடகாரணம். எப்படியாவது பா.ஜனதா வளர்ந்து விட கூடாது என்ற பயம்தான் காரணம். இந்த திசை திருப்பும் அரசியல் மக்களிடம் வெகுநாள் எடுபடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...