முருங்கையின் மருத்துவக் குணம்

 மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

முருங்கைக் கீரையை உணவாகக் கொள்ள கபம்,பித்த மயக்கம், கண்நோய், செரியா மாந்தம் தீரும்.

முருங்கைப் பூவைப் பருப்புடன் சமைத்துண்ணக் கண் எரிச்சல், வாய்நீர் ஊறல், வாய்க் கசப்பு மாறி குணம் உண்டாகும்.

 

இது முருங்கை மரத்தின் இலை. முருங்கைக் கீரை தாது புஷ்டி தருகிற கீரைகளில் ஒன்று. இரத்தத்திற்கும் உரம் அளிக்கிற உயிர்ச்சத்தும், எலும்புக்கு உரம் அளிக்கும் கால்ஷியம் என்னும் பொருளும் இதில் உண்டு. இந்தக் கீரையைச் சமைக்கும்போது இதனுடன் அரிசிமாவைத் தூவுவது பண்டைக்காலத்து வழக்கம்.

 

முருங்கைக்காயை அளவுடன் சாப்பிட்டுவர மார்புச்சளி, கபக்கட்டு நீங்கிக் குணம் உண்டாகும்.

முருங்கைக் கீரையை மூன்று கைப்பிடியளவு எடுத்து சட்டியிலிட்டு கருக்கி வர வெடித்துக் கருகி நெருப்புப்பற்றி எரிந்து உப்புக் கிடைக்கும் இதைத்தூள் செய்துப் பொடித்து பத்திரப்படுத்தி அரைத்தேக்கரண்டி வாயில்போட்டு வெந்நீர் குடித்துவர புளியேப்பம் மாறி பசியுண்டாகும்.

முருங்கை இலைச்சாறு அரைச்சங்களவு எடுத்து அதில் பட்டாணி அளவு உப்புப்போட்டு ஒருமுறை கொடுக்க வயிற்று உப்பிசம் தணிந்து குணமாகும்.

கவனமாக புழுநீக்கி எடுத்த முருங்கைப் பூவுடன் சமனளவு துவரம் பருப்பு சேர்த்து பகல் சாதத்துடன் சாப்பிட்டுவர உடல் பலமுண்டாகும். தினசரி 21 நாட்கள் சாப்பிட வேண்டும்.

விதை பிடிக்காத இளம் முருங்கை காய்களை உமிக் கருக்கில் சுட்டு நெகிழச் செய்து இடித்து சாறுபிழிந்து காய்ச்சிய பசும்பாலுடன் காலையில் மட்டும் சாப்பிட்டுவர தாது பலம் உண்டாகும். இதை 21 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.

நன்றி : முடி முதல் அடிவரை மூலிகை மருத்துவம்
டாக்டர். மு. போத்தியப்பன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்பேத்கரின் சிந்தனைகளை கட்டு ...

அம்பேத்கரின் சிந்தனைகளை கட்டுரையாக பகிர்ந்த பிரதமர் மோடி நீதி, கண்ணியம், தற்சார்பு ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியாவின் தொடக்ககால ...

காசி செழுமை அடைகிறது

காசி செழுமை அடைகிறது "தற்போது காசி பழமையின் அடையாளமாக மட்டுமின்றி, முன்னேற்றத்தின் கலங்கரை ...

கராட் நகரில் சுகாதார கழிவுகள் அ ...

கராட் நகரில் சுகாதார கழிவுகள் அகற்றம் நாடு முழுவதும் சுகாதாரக் கழிவு மேலாண்மை ஒரு பெரிய ...

ஏற்றுமதி சதவீதம் அதிகரிப்பு

ஏற்றுமதி சதவீதம் அதிகரிப்பு கடந்த நிதியாண்டில் (2024-25) ஏப்ரல்-மார்ச்) நாட்டின் ஏற்றுமதி, முந்தைய ...

திமுக வை வீழ்த்த கூட்டணிக்கு வா ...

திமுக வை வீழ்த்த கூட்டணிக்கு வாருங்கள் ; சீமானுக்கு நயினார் நாகேந்திரன் அழைப்பு ''தி.மு.க.,வை வீழ்த்த கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியும் வர ...

பிரிவினையின் ரூபம்தான் மாநில ச ...

பிரிவினையின் ரூபம்தான் மாநில சுயாட்சி திமுக என்ற கட்சி தொடங்கியதே தேசப் பிரிவினையை முன்னிறுத்திதான். தொடக்கம் ...

மருத்துவ செய்திகள்

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.