வெறுமனே அடிக்கல் நாட்டுவதில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியில் ரூ.43 ஆயிரம்கோடி முதலீட்டிலான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை இப்பகுதியில் அமைவதன் மூலம் ராஜஸ்தான் மாநில பொருளாதார நடவடிக்கைகள் முற்றிலுமாக மாற்றம்பெறும் என்று மோடி கூறினார். இந்த ஆலை இங்கு உருவாவதன் மூலம் எதிர்காலத்தில் நாட்டின் மிகப்பெரிய எரிசக்தி மாநிலமாக ராஜஸ்தான் திகழும் என்றும் அவர் கூறினார்.

இந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஹெச்பிசிஎல்) மற்றும் ராஜஸ்தான் மாநில அரசு இணைந்து மேற்கொள்கின்றன. இந்த ஆலை ஆண்டுக்கு 90 லட்சம்டன் கச்சா எண்ணெய்யை சுத்திகரிக்கும் திறன்கொண்டதாக விளங்கும்.

இந்த ஆலை 2022-ம் ஆண்டில் தனது உற்பத்தியை தொடங்கும். இதன்மூலம் மாநில அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.34 ஆயிரம்கோடி வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்த ஆலை இங்கு உருவாவதற்கு முயற்சிகள் எடுத்த பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திரபிரதான், மாநில முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோரை பிரதமர் பாராட்டினார். இருவரது முயற்சியால்தான் இந்த ஆலை செயல் வடிவம் பெற்றுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

வெறுமனே அடிக்கல் நாட்டிவிட்டு மக்களுக்கு தவறான தகவலை தரக்கூடாது. நாடு சுதந்திரம் அடைந்து 75-வது ஆண்டை 2022-ம் ஆண்டில் கொண்டாட உள்ளது. அப்போது இந்த ஆலை செயல்பாட்டுக்கு வந்திருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இதேபகுதியில் ஆலை அமைப்பதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அடிக்கல் நாட்டினார். ஆனால் அது செயல்வடிவம் பெறவில்லை. அதை மறைமுகமாகக் குறிப்பிட்டு பேசிய மோடி, இதுபோன்ற சூழல் உருவாகிவிடக்கூடாது என்றும் குறிப்பிட்டார்.

வெறுமனே அடிக்கல் நாட்டுவதில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் அது செயல்வடிவம் பெற்று முழு உற்பத்தியைத் தொடங்க வேண்டும் என்பதே தங்களது விருப்பம். காங்கிரஸ் அரசை பொறுத்த மட்டில் எந்த ஒரு திட்டத்தையும் செயல் படுத்துவதற்கு முன்பு உரிய திட்டமிடல் கிடையாது. ஆனால் எங்கள் அரசு இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்னேற்பாடாக பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது என முதல்வர் வசுந்தரா ராஜே கூறினார்.

மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு இந்தசுத்திகரிப்பு ஆலை மிகவும் உதவியாக இருக்கும் என்று மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...