இரட்டை இன்ஜின் அரசு வேகமாக செயல்படும் – பிரதமர் மோடி

வரும் ஆண்டுகளில் இரட்டை இன்ஜின் அரசு வேகமாக செயல்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், ரூ.46,400 கோடி மதிப்பிலான 24 திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: கடந்த ஓராண்டில், ராஜஸ்தான் மாநில வளர்ச்சிக்கு முதல்வர் பஜன்லால் ஷர்மா மற்றும் அவரது குழுவினர் கடினமாக உழைத்துள்ளனர். ராஜஸ்தானில் தண்ணீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்பட்டு உள்ளது. பா.ஜ., நல்லாட்சியின் அடையாளமாக மாறுகின்றன.

கட்சி தனது தீர்மானங்களை நிறைவேற்ற நேர்மையான முயற்சிகளை மேற்கொள்கிறது. ராஜஸ்தானில் இன்று நடக்கும் நவீன வளர்ச்சிப் பணிகள் வருங்கால சந்ததியினருக்கு பயனுள்ளதாக இருக்கும். இது வளர்ச்சி அடைந்த மாநிலத்தை உருவாக்க உதவும். ராஜஸ்தான் மாநிலம் வளர்ச்சி அடையும் போது இந்தியாவும் வேகமாக வளரும். வரும் ஆண்டுகளில் இரட்டை இன்ஜின் அரசு வேகமாக செயல்படும்.

கிராமங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த பா.ஜ., தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இது வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க மிகவும் முக்கியம். ராஜஸ்தானில் மின்சாரத் துறையில் பா.ஜ., அரசு பல ஒப்பந்தங்களைச் செய்துள்ளது. இதனால் நமது விவசாயிகள் அதிக பயன் பெறுவார்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பி ...

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பிரதமர் மோடி மேற்கு ஆசியா மற்​றும் உக்​ரைன் போர்​களுக்கு விரைவில் முடிவு ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இர ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; -இந்திய ஷியா பிரிவு முஸ்லீம் தலைவர். "இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; இறந்தவர்கள் நம் தலைவர்கள் அல்ல"- ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சிய ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சியினை கொடுத்த ஈரான் ஈரானின் செயல்பாடுகள் விபரீதமாக உள்ளன, யாரும் எதிர்பாராதபடி துருக்கியினை ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா அமித்ஷாவின் ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையி ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான அரசுக்கு காங்கிரஸ் பாடமெடுப்பதெல்லாம் நகைப்புக்குரியது. ஈரனின் ஐஆர்ஐஎஸ் தேனா போர்கப்பல் இந்தியாவின் கடற்கரையிலிருந்து 200 ...

வெளியுறவுக் கொள்கை காலாவதியான ...

வெளியுறவுக் கொள்கை   காலாவதியான காங்கிரஸின் சித்தாந்தங்களால் அல்ல “இந்தியா கண்மூடித்தனமாக ஈரான் பக்கம் நிற்க வேண்டும் என்று ...

மருத்துவ செய்திகள்

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...

எலும்பு நைவு (OSTEOPOROSIS)

உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ...

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...