அரசியல்வாதியின் மகளாக இருந்தபோதும் அந்தநிழலில் தலைவராக வரவில்லை

சென்னை கமலாலயத்தில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் பதிலளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

“அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் பாஜக பொறுப்பாளர்களை நியமித் திருக்கிறது. மிகவெற்றிகரமாக பொறுப்பாளர்களை நியமித்த சிலதென்னிந்திய மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவின் தமிழக வருகை பெரும்வெற்றிக்கு அடித்தளம் இடுவதாக அமையும்.

மத்திய பாஜக அரசு தமிழகத்திற்கு நல்ல திட்டங்களை தொடர்ந்து அளித்துவருகிறது. திமுக-காங்கிரஸ் கூட்டணியில் தமிழகத்திற்கு வந்த ஒரு நல்ல திட்டத்தைக்கூட சொல்ல இயலாது. ஆனால், இன்று பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரைக்கு கொடுத்திருக்கிறார். கர்நாடகம் உறுப்பினர் பெயரை அறிவிக்கா விட்டாலும், காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நதி நீர் ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்டங்களிலேயே நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சொல்லியிருக்கிறார்.

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இயற்கை சீரழிவு இல்லாமல்தான் சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை அமைக்கப்பட வேண்டும் என மத்திய அரசு சொல்லியிருக்கிறது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல்நாட்ட பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.

தமிழகத்தில் உள்ள சில அரசியல்கட்சிகள் வேண்டுமென்றே மத்திய அரசை விமர்சனம் செய்கின்றன. அவர்களுக்கு நல்ல திட்டங்களை பாராட்டுவதற்கு மனமில்லை. ஆட்சிவேறு, கட்சி வேறு. ஆளுநரின் சுற்றுப் பயணத்தை திமுக அநாவசியமாக அரசியலாக்குகிறது. ஆளுநர் மிரட்டுவதாக சொல்கின்றனர். ஆளுநர் மிரட்ட வில்லை, இட்டுக் கட்டவில்லை. சட்டப்படி உள்ளதை அறிக்கையில் சொல்லியிருக்கிறார். அனுமதியில்லாத இடங்களில் போராடினால் கைது செய்யப் படுவார்கள். திமுக சட்டம் ஒழுங்கை பாதித்து குழப்பத்தை விளைவிப் பதற்காக போராட்டம் செய்கிறது. பலமுக்கிய பிரச்சினைகள் இருக்கும்போது இதனை வேண்டுமென்றே கையில் எடுத்திருக்கிறது திமுக.

பயங்கரவாதம் குறித்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் கருத்தை அவரிடம்தான் விளக்கம் கேட்க வேண்டும். மாவோயிஸ்டுகள் குறித்து அரசுக்கு தகவல் கிடைத்தால் அதனை அரசு சரியாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இயக்குநர் கவுதமன் உள்ளிட்டவர்கள் பிரிவினைவாத பிண்ணனி உள்ளவர்கள். அவர்கள் யார், எந்த இயக்கத்தைச் சார்ந்தவர்கள் என அறிந்ததால்தான் அவர்களை கைது செய்கிறது. இவர்களின் கைது வரவேற்கத்தக்கது. அவர்கள் நல்லதிட்டங்களை கொண்டுவர விட மாட்டார்கள்.

சேலத்தை தூத்துக்குடியாக மாற்ற வேண்டும் என்பதே இவர்களது திட்டம். அரசுகளை மக்களுக்கு எதிரான வர்களாக சித்தரிக்கின்றனர். பியூஸ் மானுஷ், கவுதமன், பாரதிராஜா ஆகியோர்தான் மக்களுக்கு நல்லது செய்வது போன்று மாயையை உருவாக்குகின்றனர். போராட்டங்கள் நடத்துவதில் தப்பில்லை. மக்களின் உயிரைவாங்கி விடுவதாக அந்த போராட்டங்கள் இருக்கக்கூடாது என்பதில் அக்கறை உள்ளது. இவர்கள் போன்றவர்களின் ஊடுருவலால்தான் தூத்துக்குடி போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது என்பது என் கருத்து.

நான் யாரையும் தரக் குறைவாக விமர்சித்ததில்லை. பாமக இளைனரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், என்னை தலைவராக இருக்க தகுதி இருக்கின்றதா எனக்கேட்கிறார். தான்மட்டும் அதிபுத்திசாலி, வேறு எந்தக் கட்சியிலும் புத்திசாலிகள் இல்லை என அவர் நினைக்கிறார். 20 ஆண்டுகால கடின உழைப்பு, அறிவாற்றல், தேசியபண்பு இருப்பதால் தான் தேசியக்கட்சியின் தலைவராக வந்திருக்கிறேன். தகுதியில்லாமல் வரவில்லை. அரசியல்வாதியின் மகளாக இருந்தபோதும் அந்தநிழலில் தலைவராக வரவில்லை. சுய உழைப்பில் தலைவராக வந்திருக்கிறேன்” என தமிழிசை தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...