யாத்திரையை திசை திருப்பும் திமுக

தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையின் “என் மண், என் மக்கள்’ யாத்திரையை பொது மக்களிடமிருந்து திசை திருப்பும் முயற்சியில் திமுக ஈடுபட்டு வருவதாக பாஜக தமிழக இணைப் பொறுப்பாளர் பி.சுதாகர் ரெட்டி தெரிவித்தார்.

தில்லியில் பாஜக தேசியத் தலைமை அலுவலகத்தில், அண்ணாமலையின் “என் மண் – என் மக்கள்’ யாத்திரை தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பி. சுதாகர் ரெட்டி கூறியதாவது:

ராமேசுவரத்தில் கடந்த ஜூலை 28-ஆம் தேதி மத்தியஉள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் “என் மண் என் மக்கள்’ யாத்திரையை தொடங்கி வைத்தார். பொது மக்களிடம் இருந்து கிடைக்கும் பெரும் அளவிலான வரவேற்பால் தற்போது இந்தயாத்திரை மக்கள் யாத்திரையாக மாறியுள்ளது.

அண்ணாமலை மேற்கொள்ளும் இந்தயாத்திரையால் அரசியல் காழ்ப்புணர்வு கொண்ட திமுக, தமிழகமக்களை திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. சநாதன தர்மம் இந்துமக்களின் வாழ்க்கை நெறி. உலக அளவில் பிரதமர் மோடியின் புகழையும், தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாத திமுக, சநாதன தர்மம் குறித்து சர்ச்சையை ஏற்படுத்துகிறது.

“இந்தியா’ கூட்டணியில் திமுகவுடன் அங்கம்வகிக்கும் காங்கிரஸ் கட்சி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினையும், திமுகவையும் இந்தவிவகாரத்தில் கண்டிக்காதது ஏன் என்றார் பி. சுதாகர் ரெட்டி.

தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறுகையில், “தமிழ்நாட்டு அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை பாஜக தலைவர் அண்ணாமலை ஏற்படுத்திவருகிறார். இரண்டாம்கட்டத்தில் உள்ள அவரது “என் மண் என் மக்கள்’ யாத்திரை 55 சட்டப்பேரவைத் தொகுதிகளையும்,11 மக்களவைத் தொகுதிகளையும் அடைந்துள்ளது.

கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்திய சமூக நலத்திட்டங்களால் தமிழகம் எவ்வாறு வளர்ச்சி அடைந்துள்ளது குறித்து 5 லட்சம் புத்தகங்களை தமிழகம்முழுவதும் பொதுமக்களிடம் விநியோகித்து வருகிறோம். இந்தயாத்திரையில் கொண்டுசெல்லப்படும் புகார் பெட்டியில் திமுக மீது ஆயிரக்கணக்கில் மக்கள் ஊழல் புகார்களை அளிக்கின்றனர் என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிர� ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழ� ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழுவை சந்திக்கும் பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கங்களை கூற ...

மருத்துவ செய்திகள்

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...