யாத்திரையை திசை திருப்பும் திமுக

தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையின் “என் மண், என் மக்கள்’ யாத்திரையை பொது மக்களிடமிருந்து திசை திருப்பும் முயற்சியில் திமுக ஈடுபட்டு வருவதாக பாஜக தமிழக இணைப் பொறுப்பாளர் பி.சுதாகர் ரெட்டி தெரிவித்தார்.

தில்லியில் பாஜக தேசியத் தலைமை அலுவலகத்தில், அண்ணாமலையின் “என் மண் – என் மக்கள்’ யாத்திரை தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பி. சுதாகர் ரெட்டி கூறியதாவது:

ராமேசுவரத்தில் கடந்த ஜூலை 28-ஆம் தேதி மத்தியஉள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் “என் மண் என் மக்கள்’ யாத்திரையை தொடங்கி வைத்தார். பொது மக்களிடம் இருந்து கிடைக்கும் பெரும் அளவிலான வரவேற்பால் தற்போது இந்தயாத்திரை மக்கள் யாத்திரையாக மாறியுள்ளது.

அண்ணாமலை மேற்கொள்ளும் இந்தயாத்திரையால் அரசியல் காழ்ப்புணர்வு கொண்ட திமுக, தமிழகமக்களை திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. சநாதன தர்மம் இந்துமக்களின் வாழ்க்கை நெறி. உலக அளவில் பிரதமர் மோடியின் புகழையும், தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாத திமுக, சநாதன தர்மம் குறித்து சர்ச்சையை ஏற்படுத்துகிறது.

“இந்தியா’ கூட்டணியில் திமுகவுடன் அங்கம்வகிக்கும் காங்கிரஸ் கட்சி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினையும், திமுகவையும் இந்தவிவகாரத்தில் கண்டிக்காதது ஏன் என்றார் பி. சுதாகர் ரெட்டி.

தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறுகையில், “தமிழ்நாட்டு அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை பாஜக தலைவர் அண்ணாமலை ஏற்படுத்திவருகிறார். இரண்டாம்கட்டத்தில் உள்ள அவரது “என் மண் என் மக்கள்’ யாத்திரை 55 சட்டப்பேரவைத் தொகுதிகளையும்,11 மக்களவைத் தொகுதிகளையும் அடைந்துள்ளது.

கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்திய சமூக நலத்திட்டங்களால் தமிழகம் எவ்வாறு வளர்ச்சி அடைந்துள்ளது குறித்து 5 லட்சம் புத்தகங்களை தமிழகம்முழுவதும் பொதுமக்களிடம் விநியோகித்து வருகிறோம். இந்தயாத்திரையில் கொண்டுசெல்லப்படும் புகார் பெட்டியில் திமுக மீது ஆயிரக்கணக்கில் மக்கள் ஊழல் புகார்களை அளிக்கின்றனர் என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது இந்தியா - சீனா எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் – பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு, நிரந்தர இடம் அளிக்க வேண்டும் ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியா ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது – மோடி பெருமிதம் 'பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன் – முருகன் சாடல் 'விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் இரட்டை வேடம் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங்குடியின பெண் ஒடிசாவில் பழங்குடியின பெண் ஒருவர், பிரதமர் மோடிக்கு நன்றி ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முட ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முடியாது – L முருகன் பேட்டி ''மொழியை வைத்து மக்களை ஏமாற்றும் செயல் இனியும் எடுபடாது,'' ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...

கருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை

சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ...