ராகுல்காந்தி குடும்பத்தினர் அனைவரும் திருடர்கள்

ராகுல்காந்தி குடும்பத்தினர் அனைவரும் திருடர்கள் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார்.

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிரான்காய்ஸ் ஹாலண்டே அந்தநாட்டு பத்திரிகைக்கு அளித்த பேட்டி பெரும் விவாதப் பொருளாகி உள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறிய போது, "ரபேல் விவகாரத்தில் பிரான்சுவா ஹாலண்டே, பிரதமர் நரேந்திர மோடியை திருடர் என்று விமர்சித்துள்ளார். அவரது குற்றச்சாட்டை மோடி ஏற்றுக்கொள்கிறாரா, இல்லையா என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

ராகுலுக்கு பதில் அளிக்கும் வகையில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ட்விட்டரில் வெளியிட்டபதிவில் கூறியிருப்பதாவது:

ஆட்சியில் இல்லாத விரக்தியில் ராகுல் காந்தியும், காங்கிரஸும் அவதூறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். பாஜக ஆட்சியில் ஊழல் இல்லை. அதே நேரம் ராகுல்காந்தி குடும்பத்தினர் அனைவரும் திருடர்கள்.

இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறியபோது, “பிரான்ஸின் டசால்ட் நிறுவனம் காங்கிரஸுக்கு லஞ்சம் அளிக்கவில்லை. அதனால்தான் ரபேல் ஒப்பந்தம் காங்கிரஸ் ஆட்சியில் கையெழுத்தாக வில்லை. நேஷனல் ஹெரால்டு ஊழல்வழக்கில் ராகுலும் அவரது தாயாரும் ஜாமீனில் வெளியே உள்ளனர். ராகுலின் தங்கை கணவர் மீது நிலமோசடி வழக்கு உள்ளது. இவை குறித்து ராகுல் மவுனம் காப்பது ஏன்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஓட்டு வங்கிக்காக வக்ப் சட்டத்த� ...

ஓட்டு வங்கிக்காக வக்ப் சட்டத்திற்கு எதிர்ப்பு; மம்தா மீது அமித் ஷா குற்றச்சாட்டு முஸ்லிம் ஓட்டு வங்கியை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக 'ஆபரேஷன் ...

துணிச்சலாக பணியாற்றிய பெண் அதி� ...

துணிச்சலாக பணியாற்றிய பெண் அதிகாரிக்கு விருது 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையின் போது, ஜம்மு - காஷ்மீரின் ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

மருத்துவ செய்திகள்

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...