ராகுல்காந்தி குடும்பத்தினர் அனைவரும் திருடர்கள்

ராகுல்காந்தி குடும்பத்தினர் அனைவரும் திருடர்கள் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார்.

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிரான்காய்ஸ் ஹாலண்டே அந்தநாட்டு பத்திரிகைக்கு அளித்த பேட்டி பெரும் விவாதப் பொருளாகி உள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறிய போது, "ரபேல் விவகாரத்தில் பிரான்சுவா ஹாலண்டே, பிரதமர் நரேந்திர மோடியை திருடர் என்று விமர்சித்துள்ளார். அவரது குற்றச்சாட்டை மோடி ஏற்றுக்கொள்கிறாரா, இல்லையா என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

ராகுலுக்கு பதில் அளிக்கும் வகையில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ட்விட்டரில் வெளியிட்டபதிவில் கூறியிருப்பதாவது:

ஆட்சியில் இல்லாத விரக்தியில் ராகுல் காந்தியும், காங்கிரஸும் அவதூறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். பாஜக ஆட்சியில் ஊழல் இல்லை. அதே நேரம் ராகுல்காந்தி குடும்பத்தினர் அனைவரும் திருடர்கள்.

இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறியபோது, “பிரான்ஸின் டசால்ட் நிறுவனம் காங்கிரஸுக்கு லஞ்சம் அளிக்கவில்லை. அதனால்தான் ரபேல் ஒப்பந்தம் காங்கிரஸ் ஆட்சியில் கையெழுத்தாக வில்லை. நேஷனல் ஹெரால்டு ஊழல்வழக்கில் ராகுலும் அவரது தாயாரும் ஜாமீனில் வெளியே உள்ளனர். ராகுலின் தங்கை கணவர் மீது நிலமோசடி வழக்கு உள்ளது. இவை குறித்து ராகுல் மவுனம் காப்பது ஏன்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...