அயோத்தி பிரதான வழக்கு விரைவாக நடைபெற முட்டுக்கட்டை நீங்கியுது

அயோத்தியில் உள்ள சர்ச்சைக் குரிய நிலம் தொடர்பான வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்வு விசாரிக்கவேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கையை இந்திய உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.

அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தை சுற்றிலும் இருந்த இடத்தை மத்திய அரசு கையகப் படுத்தியது.

மசூதி இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தும் இடம் என்பதால் அதை அரசு கையகப்படுத்தக் கூடாது என்று 1994ஆம் ஆண்டில் உச்ச நீதி மன்றத்தில் டாக்டர் இஸ்மாயில் ஃபரூக்கி என்பவர் தொடர்ந்த வழக்கில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த மசூதிதேவை இல்லை என்றும் திறந்தவெளி உள்ளிட்ட எந்த இடத்திலும் தொழுகை நடத்தலாம் என்று ஐந்து நீதிபதிகள்கொண்ட அரசியல் சாசன அமர்வு கூறியிருந்தது.

இவ்வாறு கூறப்பட்ட கருத்து, பிரச்சனைக்குரிய நிலத்தில் இருபங்கை இந்துக்களுக்கும் ஒரு பங்கை இஸ்லாமியர்களுக்கும் பிரித்து வழங்கிய அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தெரிந்தோ தெரியாமலோ வழிவகுத்தது என இஸ்லாமியர்கள் தரப்பில் வாதிடப் பட்டது.

எனவே உயர் நீதிமன்றத் தீர்ப்பு மீதான மேல் முறையீட்டை மீண்டும் ஐந்து நீதிபதிகள்கொண்ட அரசியல் சாசன அமர்வே விசாரிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

எனினும் 1994இல் உச்சநீதிமன்றம் கூறிய கருத்துக்கும், 2010இல் அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கும் எந்தத்தொடர்பும் இல்லை. நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள், வாதங்கள் அடிப்படையிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டது என்பதால் அந்தத்தீர்ப்பின் மேல் முறையீட்டை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வே விசாரிக்கும் என்று தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.

வரும் அக்டோபர் 29 முதல் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வருகிறது.

ஏற்கனவே காங்கிரஸ் கட்சி தரப்பில் இந்தவழக்கின் தீர்ப்பு 2019 மே மாதத்துக்கு முன்பு வழங்கப்பட்டு, அது ஒரு வேளை இந்துக்களுக்கு அது பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவான சூழலைப் பொதுதேர்தலில் உண்டாக்கலாம் என்பதால், ஜூலை 2019க்கு மேல் தீர்ப்பு வழங்கப்படவேண்டும் என்றுகோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

இந்த வழக்கை ஒரு நிலப்பிரச்சனையாக மட்டுமே விசாரிக்கிறோம் என்று அப்போது நீதிமன்றம் கூறியிருந்தது. இதையடுத்து அயோத்தி பிரதான வழக்கு விரைவாக நடைபெற முட்டுக்கட்டை நீங்கியுள்ளது.


 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...