ரஃபேல் போர் விமானம் தைரியமான முடிவு

36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக ஏற்படுத்தப் பட்ட ஒப்பந்தம் மத்திய அரசின் தைரியமான முடிவு என விமானப் படைத் தளபதி பிரேந்தர்சிங் தனோவா தெரிவித்தார்.

இது தொடர்பாக புதன் கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:

36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதுதொடர்பாக மத்திய அரசு தைரியமாக முடிவெடுத்தது. இதன் மூலம் மிக அதிநவீன, சக்தி வாய்ந்த போர் விமானங்கள் இந்திய விமானப்படைக்கு கிடைத்துள்ளன. இதில் ரஃபேல் ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கு முன்பாக குறிப்பிட்ட அனுமதிக்கப்பட்ட நிலைவரை எங்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது.

இதில் விமான ஒப்பந்தம் தொடர்பாக நம்மிடம் 3 வழி இருந்தன. அதில், ஏதேனும் சரியாக நடக்கும்வரை பொறுமையுடன் இருப்பது அல்லது இந்த ஒப்பந்தத்தில் இருந்து பின் வாங்குவது அல்லது உடனடியாக போர் விமானங்களை கொள்முதல் செய்வதாகும். எனவே உடனடியாக கொள்முதல்செய்ய முடிவு செய்யப்பட்டது. 

ஹால் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் விநியோகத்தில் காலதாமதம் ஏற்பட்டது. குறிப்பாக சுகோய்-30 போர் விமானத்தில் 3 வருடங்கள், ஜாகுவாரில் 6 வருடங்கள், எல்சிஏ-வில் 5 வருடங்கள், மிரேஜ் 2000 மேம்பாட்டில் 2 வருடங்கள் என கால தாமதம் ஏற்பட்டது. 

ரஃபேல் போர் விமானங்கள் மட்டுமல்லாமல் ரஷியாவுடன் எஸ்-400 ஒப்பந்தம் மூலம் இந்திய விமானப் படையின் தரம் உயரும். மேலும் ரஷிய அதிபர் முன்னிலையில் நடைபெறவுள்ள இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட 24 மாதங்களுக்குள் இந்திய விமானப் படையில் பயன் பாட்டுக்கு வரும் என்று தெரிவித்தார்.  

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...