ரஃபேல் போர் விமானம் தைரியமான முடிவு

36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக ஏற்படுத்தப் பட்ட ஒப்பந்தம் மத்திய அரசின் தைரியமான முடிவு என விமானப் படைத் தளபதி பிரேந்தர்சிங் தனோவா தெரிவித்தார்.

இது தொடர்பாக புதன் கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:

36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதுதொடர்பாக மத்திய அரசு தைரியமாக முடிவெடுத்தது. இதன் மூலம் மிக அதிநவீன, சக்தி வாய்ந்த போர் விமானங்கள் இந்திய விமானப்படைக்கு கிடைத்துள்ளன. இதில் ரஃபேல் ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கு முன்பாக குறிப்பிட்ட அனுமதிக்கப்பட்ட நிலைவரை எங்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது.

இதில் விமான ஒப்பந்தம் தொடர்பாக நம்மிடம் 3 வழி இருந்தன. அதில், ஏதேனும் சரியாக நடக்கும்வரை பொறுமையுடன் இருப்பது அல்லது இந்த ஒப்பந்தத்தில் இருந்து பின் வாங்குவது அல்லது உடனடியாக போர் விமானங்களை கொள்முதல் செய்வதாகும். எனவே உடனடியாக கொள்முதல்செய்ய முடிவு செய்யப்பட்டது. 

ஹால் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் விநியோகத்தில் காலதாமதம் ஏற்பட்டது. குறிப்பாக சுகோய்-30 போர் விமானத்தில் 3 வருடங்கள், ஜாகுவாரில் 6 வருடங்கள், எல்சிஏ-வில் 5 வருடங்கள், மிரேஜ் 2000 மேம்பாட்டில் 2 வருடங்கள் என கால தாமதம் ஏற்பட்டது. 

ரஃபேல் போர் விமானங்கள் மட்டுமல்லாமல் ரஷியாவுடன் எஸ்-400 ஒப்பந்தம் மூலம் இந்திய விமானப் படையின் தரம் உயரும். மேலும் ரஷிய அதிபர் முன்னிலையில் நடைபெறவுள்ள இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட 24 மாதங்களுக்குள் இந்திய விமானப் படையில் பயன் பாட்டுக்கு வரும் என்று தெரிவித்தார்.  

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...

உடற்பயிற்சியின் அவசியம்

கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ...

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...