இருதரப்பு விமானசேவை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் எந்தவொரு வெளிநாட்டு விமான நிறுவனமும் இந்தியாவிற்கோ அல்லது இந்தியாவிலிருந்தோ விமானசேவையை அளிக்க முடியும். இந்த ஒப்பந்தம் தொடர்பாக 116 வெளிநாடுகளுடன் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. அதேபோல் இந்தியாவிலிருந்தும் அந்த வெளிநாடுகளுக்கு விமானச் சேவையை இயக்கமுடியும்.
சிறிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களில் வெளிநாட்டு பயணிகள் விமானசேவைக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை.
ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், பூடான், கனடா, சீனா, சிரியா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஜப்பான், ஐக்கிய அரபு எமிரேட் உள்ளிட்ட நாடுகளுடன் இருதரப்புவிமான சேவை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
இத்தகவலை மாநிலங்களவையில் விமான போக்குவரத்து இணைஅமைச்சர் ஓய்வு பெற்ற ஜெனரல் வி கே சிங், எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறினார்.
சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ... |
அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ... |
காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ... |