ஏழைகள் சக்தி வாய்ந்தவர்களாக மாறினால், நாடும் சக்தி வாய்ந்ததாக மாறும்.

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் தலைவர்கள் 10க்கும் மேற்பட்டோர், முதல்வர்பதவி கனவுகளோடு உள்ளனர். அவர்களில் 3 பேர் முதல்வர் வேட்பாளர்களாக இருக்கின்றனர். 


அவர்கள் ஒவ்வொருவரும் பிறரின் கால்களை வாரிவிட்டுக் கொண்டிருக்கின்றனர். முதல்வர் பதவி கனவில் அதிகம்பேர் இருக்கையில், அவர்களால் மக்களின் வளர்ச்சிகுறித்து சிந்திக்க முடியாது. 


மத்தியப் பிரதேசத்தை ஆளும் பாஜக அரசுக்கு எதிராக பிரச்னைகளை எழுப்புவதற்கு காங்கிரஸுக்கு எதுவும் கிடைக்க வில்லை. அனைத்து நிலைகளிலும் மாநில பாஜக அரசு பல்வேறு வளர்ச்சிபணிகளை செயல்படுத்தியிருப்பதால், அக்கட்சி விரக்தியடைந்துள்ளது. 


இந்த விரக்தியின்காரணமாக, பாஜக அரசை விமர்சிப்பதற்கு பாகிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து கிடைக்கும் புகைப் படங்களை காங்கிரஸ் பயன்படுத்துகிறது. இதேபோல், போலியான செய்திகளையும் காங்கிரஸ் பரப்பிவருகிறது. அவர்களின் பொய்களை, மக்களிடையே நீங்கள் (பாஜகவினர்) அம்பலப்படுத்த வேண்டும் .


பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் செய்துவரும் பொய் பிரசாரத்துக்கு  அதிக முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை; கேளிக்கையாக நினையுங்கள். சாகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புதிய பெண் வாக்காளர்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமானோர் பாஜக.,வை ஆதரிக்கிறார்கள் என்பதை தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் நான் தெரிந்துகொண்டேன்.


மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் நலத் திட்டத்தை செயல்படுத்தியதற்காக, நாட்டுமக்கள் நம்மை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்; அவர்களின் ஆசீர்வாதம் நமக்கு உண்டு. ஏழைகள் சக்தி வாய்ந்தவர்களாக மாறினால், நாடும் சக்தி வாய்ந்ததாக மாறும்.

5 மக்களவை தொகுதிகளை சேர்ந்த பாஜக.,வினருடன் தில்லியிலிருந்தபடி விடியோகான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி உரையாடியாது. 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் 3வது பெரிய பொருளாதார நாட� ...

உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது என்ன? சிறு நகர வளர்ச்சிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாட்டிலிருந்து மூன்றாவது பெரிய ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில� ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள் குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் ப� ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி வேண்டுகோள் காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட் ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியை மறந்து விட்டது பாகிஸ்தான் – அமித்ஷா மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு ப� ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள்: திமுக அரசுக்கு பா.ஜ., வலியுறுத்தல் கடந்த 152 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கீரிப்பாறை ...

தவிக்கும் தென் மாவட்ட மக்கள்

தவிக்கும் தென் மாவட்ட மக்கள் ''தாமிரபரணி ஆற்றிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் குடிநீர் மாசுபட்டிருப்பதால் தென் ...

மருத்துவ செய்திகள்

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...

தோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை

பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ...