கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் மௌனம் காப்பது ஏன்? மத்திய நிதி அமைச்சர் கேள்வி

 

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 56க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரத்தில் காங்கிரஸ், ஒரு அறிக்கை கூட வெளியிடாமல் மவுனம்காப்பது அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறியுள்ளார்.

இது தொடர்பாக நிர்மலா சீதாராமன் கூறியதாவது:

கண்டனம்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 56 பேர் இறந்தனர். 200 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இறந்தவர்களில் பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இந்தசம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. கள்ளச்சாராய சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன்.

மவுனம்

கள்ளச்சாராய பலிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி ஒரு அறிக்கை கூட விடாமல் மவுனம் காப்பது கடும் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் அரசு நடத்தும் டாஸ்மாக் மூலம் லைசென்ஸ் பெற்று மதுவிநியோகம் செய்யப்படுகிறது. ஆனால், அதற்குமாறாக, கள்ளக்குறிச்சி நகரின் மையப்பகுதியில் ரசாயனம் கலந்த கள்ளச்சாராயம் விற்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் எங்கே போனார்கள். வெற்றி உறுதி என தெரிந்ததால், லோக்சபா தேர்தலில் ராகுல் போட்டியிட்டார். ஆனால், கள்ளச்சாராயத்தால் தாழ்த்தப்பட்டவர்கள் இறந்தால், ராகுலிடம் இருந்து ஒரு அறிக்கை கூட வெளிவராது.

 

அனுமதி மறுப்பு

1971 ல் வழங்கப்பட்ட பல நல்ல அறிவுரைகளையும் மீறி, தமிழகத்தில் மதுவிலக்கை நீக்கிய திமுக அரசு மதுவை அறிமுகப்படுத்தியது. இதற்கு பிறகு, ஆண்டுக்கு ஆண்டு மது விற்பனை அதிகரித்தது. இன்று அரசே டாஸ்மாக் மூலம் மது விநியோகம் செய்கிறது. இந்த கடைகள் மாநிலம் முழுவதும் உள்ளது. ஆனால், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததால், மக்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கு வீட்டின் பின்புறம் கள்ளச்சாராயம் காய்ச்சியதே காரணம். 5 குழந்தைகள் பெற்றோரை இழந்து அனாதை ஆகி உள்ளனர். இந்த விவகாரம் குறித்து சட்டசபையில் விவாதம் நடத்த திமுக அரசு அனுமதி மறுக்கிறது.

 

வலியுறுத்தல்

இந்த விவகாரத்தை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என பா.ஜ.க  சார்பில் வலியுறுத்துகிறேன். கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களுக்கு ஆளுங்கட்சியினர் ஆதரவுஅளிப்பதால் மாநிலஅரசு நடத்தும் விசாரணை முழுமை பெறாது. இதனால், இந்த விவகாரத்தை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

போர் விமானங்களை விரைவு சாலைகளி� ...

போர் விமானங்களை விரைவு சாலைகளில் தரையிறக்கி ஒத்திகை பஹல்காம் தாக்குதலுக்குபிறகு, இந்திய விமானப்படையினர், போர் விமானங்களை விரைவு ...

துறைமுக நகரங்கள் முக்கியவளர்ச� ...

துறைமுக நகரங்கள் முக்கியவளர்ச்சி மையமாக மாறும் கேரளாவின் திருவனந்தபுரத்தில் விழிஞ்சம் துறைமுகத்தை அதானிநிறுவனம் பொதுத்துறை மற்றும் ...

தமிழக விவசாயிகளை ஏமாற்றும் தி.ம ...

தமிழக விவசாயிகளை ஏமாற்றும் தி.மு.க., அரசு: அண்ணாமலை குற்றச்சாட்டு பொய்யான வாக்குறுதிகள் கொடுத்துத் விவசாயிகளை ஏமாற்றி வரும் தி.மு.க., ...

மோடி வேண்டும் என சொல்லும் பாகிஸ ...

மோடி வேண்டும் என சொல்லும் பாகிஸ்தானியர் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை சுமூகமான சூழலில் கொண்டுசெல்ல ...

எந்த ஒரு சவாலையும் சந்திக்கும் ...

எந்த ஒரு சவாலையும் சந்திக்கும் போராளி பிரதமர் மோடி – நடிகர் ரஜினிகாந்த் 'பஹல்காம் தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது; மோடி ஜம்மு-காஷ்மீருக்கு அமைதியைக் கொண்டுவருவார்,' ...

சினிமா தயாரிப்பில் உலகின் மையம� ...

சினிமா தயாரிப்பில் உலகின் மையமாக மாறி வரும் இந்தியா: பிரதமர் மோடி பெருமிதம் ''சினிமா தயாரிப்பில் உலகளாவிய மையமாக இந்தியா வளர்ந்து வருகிறது'' ...

மருத்துவ செய்திகள்

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...