கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் மௌனம் காப்பது ஏன்? மத்திய நிதி அமைச்சர் கேள்வி

 

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 56க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரத்தில் காங்கிரஸ், ஒரு அறிக்கை கூட வெளியிடாமல் மவுனம்காப்பது அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறியுள்ளார்.

இது தொடர்பாக நிர்மலா சீதாராமன் கூறியதாவது:

கண்டனம்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 56 பேர் இறந்தனர். 200 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இறந்தவர்களில் பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இந்தசம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. கள்ளச்சாராய சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன்.

மவுனம்

கள்ளச்சாராய பலிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி ஒரு அறிக்கை கூட விடாமல் மவுனம் காப்பது கடும் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் அரசு நடத்தும் டாஸ்மாக் மூலம் லைசென்ஸ் பெற்று மதுவிநியோகம் செய்யப்படுகிறது. ஆனால், அதற்குமாறாக, கள்ளக்குறிச்சி நகரின் மையப்பகுதியில் ரசாயனம் கலந்த கள்ளச்சாராயம் விற்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் எங்கே போனார்கள். வெற்றி உறுதி என தெரிந்ததால், லோக்சபா தேர்தலில் ராகுல் போட்டியிட்டார். ஆனால், கள்ளச்சாராயத்தால் தாழ்த்தப்பட்டவர்கள் இறந்தால், ராகுலிடம் இருந்து ஒரு அறிக்கை கூட வெளிவராது.

 

அனுமதி மறுப்பு

1971 ல் வழங்கப்பட்ட பல நல்ல அறிவுரைகளையும் மீறி, தமிழகத்தில் மதுவிலக்கை நீக்கிய திமுக அரசு மதுவை அறிமுகப்படுத்தியது. இதற்கு பிறகு, ஆண்டுக்கு ஆண்டு மது விற்பனை அதிகரித்தது. இன்று அரசே டாஸ்மாக் மூலம் மது விநியோகம் செய்கிறது. இந்த கடைகள் மாநிலம் முழுவதும் உள்ளது. ஆனால், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததால், மக்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கு வீட்டின் பின்புறம் கள்ளச்சாராயம் காய்ச்சியதே காரணம். 5 குழந்தைகள் பெற்றோரை இழந்து அனாதை ஆகி உள்ளனர். இந்த விவகாரம் குறித்து சட்டசபையில் விவாதம் நடத்த திமுக அரசு அனுமதி மறுக்கிறது.

 

வலியுறுத்தல்

இந்த விவகாரத்தை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என பா.ஜ.க  சார்பில் வலியுறுத்துகிறேன். கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களுக்கு ஆளுங்கட்சியினர் ஆதரவுஅளிப்பதால் மாநிலஅரசு நடத்தும் விசாரணை முழுமை பெறாது. இதனால், இந்த விவகாரத்தை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில ...

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் மிரட்டலுக்கும் அடிபணிபவர் இல்லை “பிரதமர் மோடி எந்தவொரு நாட்டுக்கும், எந்தவொரு மிரட்டலுக்கும் அடிபணிபவர் ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் பாகிஸ்தானுக்கே சென்று விடலாம் ஆபரேஷன் சிந்தூரை பாரட்டி தமிழ்நாடு பாஜக சார்பில் தேசியக்கொடி ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் வரையறைகள் உள்ளன அ.தி.மு.க.,வுடனான கூட்டணியை இறுதி செய்வதற்காக அமித் ஷா தமிழகம் ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தே ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தேவையில்லை – அண்ணாமலை ''தமிழக முதல்வரை சாமானியராக இருந்து குறை சொல்லலாம். அதற்கு ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அம ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு ...

மருத்துவ செய்திகள்

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...

வெண் தாமரைப் பூ

இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ...