நேரில் தன்னை சந்திக்க சிபிஐ இயக்குனர்களுக்கு பிரதமர் சம்மன்

சிபிஐ  அமைப்பின் இயக்குனராக அலோக் வர்மா உள்ளார். இதன் துணை அல்லது சிறப்பு இயக்குனராக ராகேஷ் அஸ்தனா பணியாற்றிவருகிறார். நாட்டின் மிக முக்கிய துறையான சிபிஐ-யில், இந்த இரு உயர் அதிகாரிகளுக்கும் இடையே அதிகாரயுத்தம் இருப்பதாக தகவல்கள் சமீபத்தில் வெளியாகின. 

இதற்கிடையே, தனது மூத்த அதிகாரியான சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவுக்கு எதிராக பல்வேறு குற்றச் சாட்டுகளை சுமத்தி துணை இயக்குனர் ராகேஷ் அஸ்தனா மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். 

இதே போன்று லஞ்சம் வாங்கியதாக ராகேஷ் அஸ்தனா மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு இறைச்சி ஏற்றுமதிசெய்ததில் பண மோசடி செய்ததாக ஐதராபாத்தை சேர்ந்த வர்த்தகர் மொய்ன்குரேஷி மீது வழக்கு தொடரப்பட்டது. இதனை சிபிஐ-தான் விசாரித்தது.

இந்தவழக்கில் இருந்து மொய்ன் குரேஷியை விடுவிக்க வேண்டும் என்றால் ரூ. 5 கோடி தரவேண்டும் என்று அஸ்தனா தரப்பில் கேட்டதாக சிபிஐ தனது முதல் தகவல் அறிக்கையில் பதிவுசெய்துள்ளது. அதே நேரத்தில், துணை இயக்குனராக அஸ்தனாவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தபோது, அதற்கான அனுமதியை பிரதமர் அலுவலகத்திடம் சிபிஐ கேட்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அஸ்தனாவுக்கு கீழ் பணியாற்றிய அதிகாரி தேவேந்திரகுமார் என்பவரை சிபிஐ இன்று கைது செய்துள்ளது.

 

இத்தகைய சூழலில்தான் நேரில் தன்னை சந்திக்குமாறு சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா மற்றும் துணை இயக்குனர் ராகேஷ் அஸ்தனா ஆகியோருக்கு பிரதமர் மோடி சம்மன் அனுப்பி உள்ளார். 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...