அரசியல் செய்யாமல் மக்களுக்கு தேவையான உதவிகளை இறங்கி செய்யவேண்டும்

கஜா புயலால் ஏற்பட்ட சேதத்தை பார்வை யிடுவதுக்காக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் புதுக்கோட்டை , தஞ்சை மாவட்டங்களுக்கு  வந்திருந்தார்.

அங்கு செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில், 'கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் பெருமளவு பாதிப்புக் குள்ளாகியுள்ளது. குறிப்பாக புதுக்கோட்டையில் மிக அதிகளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. எல்லா அரசியல் கட்சிகளும் முழுவீச்சில் இறங்கி மக்களுக்கு உதவிசெய்ய வேண்டும்' பட்டிமன்றம் பேச, அரசியல் பேச இதுநேரமல்ல, மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டிய நேரமாகும் என்று கூறினார்.

மத்திய அரசை பொறுத்தவ ரையில் அனைத்து தொண்டர்களும் மீட்புக்குழுவில் இருக்கிறார்கள். பிரதமர் மோடி, முதலமைச்சரை நேரடியாக தொடர்புகொண்டு ஆலோசனை வழங்கிவருவதாக கூறினார்.

பாரத்பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தண்ணீர் மற்றும் பால்போன்ற பொருட்கள் அனுப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

சுகாதாரத் துறை மூலம் மக்களுக்கு தேவையான அனைத்து நிவாரணங்களும் வழங்கப்பட்டு வருவதாகவும், விமானப் படை மூலம் சேதங்கள் கணக்கிடப்பட்டு வருவதாகவும் கூறினார்.

மேலும் அவர், நூறு வருடங்களுக்கு தேவையான மரங்கள் கஜாபுயலினால் அழிந்திருப்பதாகவும் வேதனை தெரிவித்தார். 

வேதனையான இந்த சூழ்நிலையில், அரசியல் செய்யாமல் மக்களுக்கு தேவையான உதவிகளை இறங்கி செய்யவேண்டும் திருநாவுக்கரசருக்கு சுட்டிக்காட்டினார்.

 

One response to “அரசியல் செய்யாமல் மக்களுக்கு தேவையான உதவிகளை இறங்கி செய்யவேண்டும்”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...