அரசியல் செய்யாமல் மக்களுக்கு தேவையான உதவிகளை இறங்கி செய்யவேண்டும்

கஜா புயலால் ஏற்பட்ட சேதத்தை பார்வை யிடுவதுக்காக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் புதுக்கோட்டை , தஞ்சை மாவட்டங்களுக்கு  வந்திருந்தார்.

அங்கு செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில், 'கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் பெருமளவு பாதிப்புக் குள்ளாகியுள்ளது. குறிப்பாக புதுக்கோட்டையில் மிக அதிகளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. எல்லா அரசியல் கட்சிகளும் முழுவீச்சில் இறங்கி மக்களுக்கு உதவிசெய்ய வேண்டும்' பட்டிமன்றம் பேச, அரசியல் பேச இதுநேரமல்ல, மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டிய நேரமாகும் என்று கூறினார்.

மத்திய அரசை பொறுத்தவ ரையில் அனைத்து தொண்டர்களும் மீட்புக்குழுவில் இருக்கிறார்கள். பிரதமர் மோடி, முதலமைச்சரை நேரடியாக தொடர்புகொண்டு ஆலோசனை வழங்கிவருவதாக கூறினார்.

பாரத்பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தண்ணீர் மற்றும் பால்போன்ற பொருட்கள் அனுப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

சுகாதாரத் துறை மூலம் மக்களுக்கு தேவையான அனைத்து நிவாரணங்களும் வழங்கப்பட்டு வருவதாகவும், விமானப் படை மூலம் சேதங்கள் கணக்கிடப்பட்டு வருவதாகவும் கூறினார்.

மேலும் அவர், நூறு வருடங்களுக்கு தேவையான மரங்கள் கஜாபுயலினால் அழிந்திருப்பதாகவும் வேதனை தெரிவித்தார். 

வேதனையான இந்த சூழ்நிலையில், அரசியல் செய்யாமல் மக்களுக்கு தேவையான உதவிகளை இறங்கி செய்யவேண்டும் திருநாவுக்கரசருக்கு சுட்டிக்காட்டினார்.

 

One response to “அரசியல் செய்யாமல் மக்களுக்கு தேவையான உதவிகளை இறங்கி செய்யவேண்டும்”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்க ...

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்களை வரவேற்போம்!! தமிழக மக்களிடம் முருக பக்தர்கள் மாநாட்டிற்கான ஆதரவு பல்கி ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தம ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தமிழக அரசு: நயினார் நகேந்திரன் குற்றச்சாட்டு மாம்பழ விவசாயிகள் வயிற்றில் அடிக்காமல், கொள்முதல் விலையை உயர்த்த ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்கா ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்காட்சிக்கு அறுபடை வீடுகளில் இருந்து வந்த வேல் மதுரை, வண்டியூர் டோல் கேட் அருகே ஜூன், 22ல் ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவ ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவை மாறிவருவது ஏன்: நயினார் நாகேந்திரன் கேள்வி கோவை பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறிவருவது ஏன்? என தமிழக ...

கோவில் சிலைகள் பாதுகாப்பு கேள் ...

கோவில் சிலைகள் பாதுகாப்பு கேள்விக்குறியானது ஏன்? – நயினார் நாகேந்திரன் கோவை சின்னியம்பாளையத்தில் பிளேக் மாரியம்மன் கோவில் சிலைகளை, மர்ம ...

காவலர்களுக்கு பதவி உயர்வு அரசா ...

காவலர்களுக்கு பதவி உயர்வு அரசாணை: முதல்வருக்கு நயினார் நகேந்திரன் வலியுறுத்தல் 2011-ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்த காவலர்களுக்கு, சிறப்பு ...

மருத்துவ செய்திகள்

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...