தியானம் ஏன் வேண்டும்?

 ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் நெறியாகும். வாழ்க்கையில் ஒரு தெளிவான குறிக்கோளை நிர்ணயித்துக் கொள்வதற்கும், அவ்வாறு நிர்ணயித்துக் கொண்ட குறிக்கோளைச் சிக்கல் இல்லாமல் – இடையூறு இல்லாமல் அடைவதற்கும், தியானம் செய்ய வேண்டும். சிதறிச் சீரழியும் மனித மனதை ஒழுங்குப்படுத்தி, அதன் பேராற்றலை ஒன்று திரட்டி ஒருமுகப்படுத்தி, சரியான இலக்கு நோக்கிச் செலுத்தி, மகத்தான வெற்றி பெற தியானம் வேண்டும்.

 

மனம் வலிமை பெற
மனம் அமைதி பெற
கலங்கிய மனத்துக்கு ஆறுதல் தர
புலன்களைக் கட்டுப்படுத்த
தோல்விகளைத் தவிர்க்க,
அறுகுணங்களைச் சீரமைக்க
கவலைகளைச் சுட்டெரிக்க
தன்முனைப்பை அழித்திட
கோபத்தைத் தவிர்க்க
ஆனந்தத்தைப் பெற
இலட்சியத்தில் வெற்றி பெற
வாழ்க்கையில் முன்னேற்றமடைய
தொண்டாற்றி இன்பமுற
மனதைப்புற உலகிலிருந்து விடுதலை பெற
மனதில் உறங்கிக் கிடக்கும் சக்திகளைப் பயனுள்ளதாக்க
பாவப் பதிவுகளை அழித்து தூய்மை செய்ய,
தியானம் செய்ய வேண்டும்.

உலகத்தில் உள்ள மெய்யான இன்பத்தைஎல்லாம் நுகர்ந்து தமக்கும், பிறர்க்கும் நிலைத்த பயன் விளைவதற்குரிய நற்காரியங்கள் செய்து, உலகத்திலுள்ள குழப்பங்களும், துன்பங்களும் நீங்க, மகிழ்ச்சியும், புகழும் பெறத் தியானம் செய்ய வேண்டும்.

தியான நிலையில் பெரிய விஞ்ஞானக் கருத்து ஒரு மின்னல் போலத் தோன்றுகிறது . இந்தத் தியான முறையிலே தான், இந்நாளில் எல்லா விஞ்ஞான விநோதங்களும் கண்டுபிடிக்கப்படுகின்றன.

தியானம் செய்வதால், மனம் ஆற்றல் மிக்கதாக இருக்கிறது. செயல் வேகம் மிகுந்ததாக இருக்கும். சாமானிய மக்களால் சிந்திக்கக் கூட இயலாத அரும்பெருஞ் சாதனைகளை ஆற்றுகின்ற வல்லமை கிடைக்கத் தியானம் உதவிடுகிறது.

மறதியை விளக்க தியானம் வேண்டும். மனம் சக்தி பெற சாப்பாடு தியானம்தான். காதலிலும், குடும்ப வாழ்விலும், தொழிலும், பொது வாழ்விலும் இடிவிழுந்து நசுங்கிய உங்கள் இதயத்து வலி நீங்கத் தியானம் வேண்டும். விண்ணில் சுழலும் விசித்திர உண்மைகளை, அதிசயங்களைக் கண்டு ஞானம் பெற, நாம் ஏறிப் பறக்க தேவைப்படும் ஊர்தியே தியானம்.

சொந்த வாழ்வில் மேம்பட்ட நிலையை எய்துவதுடன், சமுதாய ரீதியிலும் உலகியல் ரீதியிலும், மனித குலத்திற்கு எத்தனையோ நன்மைகளைச் செய்து, தொண்டாற்றி இன்பமுற தியானம் உதவுகிறது.

முடிவாக நல்ல உடல் நலம், மன நலம், நீளாயுள், நிறை செல்வம், உயர்புகழ், மெய்ஞானம் பெற்றுப் பேரின்ப வாழ்வு வாழ தியானம் செய்ய வேண்டும்.

நன்றி : பானுகுமார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கூடுதல் எஸ்-400 ஏவுகணை தடுப்பு அம� ...

கூடுதல் எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்புகள்: இந்தியா நடவடிக்கை சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைப்பகுதிகளில் வான் பாதுகாப்பை வலுப்படுத்த, ...

நமது ட்ரோன், ஏவுகணைகளால் தூக்கம ...

நமது ட்ரோன், ஏவுகணைகளால் தூக்கம் தொலைத்த பாக்.,: பிரதமர் மோடி ''நமது ட்ரோன்கள், ஏவுகணைகளை நினைத்து நீண்ட காலத்திற்கு பாகிஸ்தானால் ...

ஆதம்பூர் விமானப்படை தளத்தில் ப� ...

ஆதம்பூர் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி; வீரர்களுடன் கலந்துரையாடல் எல்லையோர மாநிலமான பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்தில் ...

ராணுவத் தலைவர்களுடன் ராஜ்நாத் � ...

ராணுவத் தலைவர்களுடன் ராஜ்நாத் சிங் முக்கிய ஆலோசனை டில்லியில் ராணுவத் தலைவர்களுடன், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் ...

எல்லைப் பகுதிகளில் அமைதியான சூ� ...

எல்லைப் பகுதிகளில் அமைதியான சூழ்நிலை: உறுதி செய்தது இந்திய ராணுவம் ''சர்வதேச எல்லையில் போர்நிறுத்த மீறல்கள் எதுவும் நடக்கவில்லை. எல்லைப் ...

இந்தியா நிகழ்த்திய சாதனை உலகத்� ...

இந்தியா நிகழ்த்திய சாதனை உலகத்துக்கே ஒரு பாடம் பாகிஸ்தானுக்கு எதிரான, 'ஆப்பரேஷன் சிந்துார்' துவங்கிய பின், நாட்டு ...

மருத்துவ செய்திகள்

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.