தியானம் ஏன் வேண்டும்?

 ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் நெறியாகும். வாழ்க்கையில் ஒரு தெளிவான குறிக்கோளை நிர்ணயித்துக் கொள்வதற்கும், அவ்வாறு நிர்ணயித்துக் கொண்ட குறிக்கோளைச் சிக்கல் இல்லாமல் – இடையூறு இல்லாமல் அடைவதற்கும், தியானம் செய்ய வேண்டும். சிதறிச் சீரழியும் மனித மனதை ஒழுங்குப்படுத்தி, அதன் பேராற்றலை ஒன்று திரட்டி ஒருமுகப்படுத்தி, சரியான இலக்கு நோக்கிச் செலுத்தி, மகத்தான வெற்றி பெற தியானம் வேண்டும்.

 

மனம் வலிமை பெற
மனம் அமைதி பெற
கலங்கிய மனத்துக்கு ஆறுதல் தர
புலன்களைக் கட்டுப்படுத்த
தோல்விகளைத் தவிர்க்க,
அறுகுணங்களைச் சீரமைக்க
கவலைகளைச் சுட்டெரிக்க
தன்முனைப்பை அழித்திட
கோபத்தைத் தவிர்க்க
ஆனந்தத்தைப் பெற
இலட்சியத்தில் வெற்றி பெற
வாழ்க்கையில் முன்னேற்றமடைய
தொண்டாற்றி இன்பமுற
மனதைப்புற உலகிலிருந்து விடுதலை பெற
மனதில் உறங்கிக் கிடக்கும் சக்திகளைப் பயனுள்ளதாக்க
பாவப் பதிவுகளை அழித்து தூய்மை செய்ய,
தியானம் செய்ய வேண்டும்.

உலகத்தில் உள்ள மெய்யான இன்பத்தைஎல்லாம் நுகர்ந்து தமக்கும், பிறர்க்கும் நிலைத்த பயன் விளைவதற்குரிய நற்காரியங்கள் செய்து, உலகத்திலுள்ள குழப்பங்களும், துன்பங்களும் நீங்க, மகிழ்ச்சியும், புகழும் பெறத் தியானம் செய்ய வேண்டும்.

தியான நிலையில் பெரிய விஞ்ஞானக் கருத்து ஒரு மின்னல் போலத் தோன்றுகிறது . இந்தத் தியான முறையிலே தான், இந்நாளில் எல்லா விஞ்ஞான விநோதங்களும் கண்டுபிடிக்கப்படுகின்றன.

தியானம் செய்வதால், மனம் ஆற்றல் மிக்கதாக இருக்கிறது. செயல் வேகம் மிகுந்ததாக இருக்கும். சாமானிய மக்களால் சிந்திக்கக் கூட இயலாத அரும்பெருஞ் சாதனைகளை ஆற்றுகின்ற வல்லமை கிடைக்கத் தியானம் உதவிடுகிறது.

மறதியை விளக்க தியானம் வேண்டும். மனம் சக்தி பெற சாப்பாடு தியானம்தான். காதலிலும், குடும்ப வாழ்விலும், தொழிலும், பொது வாழ்விலும் இடிவிழுந்து நசுங்கிய உங்கள் இதயத்து வலி நீங்கத் தியானம் வேண்டும். விண்ணில் சுழலும் விசித்திர உண்மைகளை, அதிசயங்களைக் கண்டு ஞானம் பெற, நாம் ஏறிப் பறக்க தேவைப்படும் ஊர்தியே தியானம்.

சொந்த வாழ்வில் மேம்பட்ட நிலையை எய்துவதுடன், சமுதாய ரீதியிலும் உலகியல் ரீதியிலும், மனித குலத்திற்கு எத்தனையோ நன்மைகளைச் செய்து, தொண்டாற்றி இன்பமுற தியானம் உதவுகிறது.

முடிவாக நல்ல உடல் நலம், மன நலம், நீளாயுள், நிறை செல்வம், உயர்புகழ், மெய்ஞானம் பெற்றுப் பேரின்ப வாழ்வு வாழ தியானம் செய்ய வேண்டும்.

நன்றி : பானுகுமார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...