தியானம் ஏன் வேண்டும்?

 ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் நெறியாகும். வாழ்க்கையில் ஒரு தெளிவான குறிக்கோளை நிர்ணயித்துக் கொள்வதற்கும், அவ்வாறு நிர்ணயித்துக் கொண்ட குறிக்கோளைச் சிக்கல் இல்லாமல் – இடையூறு இல்லாமல் அடைவதற்கும், தியானம் செய்ய வேண்டும். சிதறிச் சீரழியும் மனித மனதை ஒழுங்குப்படுத்தி, அதன் பேராற்றலை ஒன்று திரட்டி ஒருமுகப்படுத்தி, சரியான இலக்கு நோக்கிச் செலுத்தி, மகத்தான வெற்றி பெற தியானம் வேண்டும்.

 

மனம் வலிமை பெற
மனம் அமைதி பெற
கலங்கிய மனத்துக்கு ஆறுதல் தர
புலன்களைக் கட்டுப்படுத்த
தோல்விகளைத் தவிர்க்க,
அறுகுணங்களைச் சீரமைக்க
கவலைகளைச் சுட்டெரிக்க
தன்முனைப்பை அழித்திட
கோபத்தைத் தவிர்க்க
ஆனந்தத்தைப் பெற
இலட்சியத்தில் வெற்றி பெற
வாழ்க்கையில் முன்னேற்றமடைய
தொண்டாற்றி இன்பமுற
மனதைப்புற உலகிலிருந்து விடுதலை பெற
மனதில் உறங்கிக் கிடக்கும் சக்திகளைப் பயனுள்ளதாக்க
பாவப் பதிவுகளை அழித்து தூய்மை செய்ய,
தியானம் செய்ய வேண்டும்.

உலகத்தில் உள்ள மெய்யான இன்பத்தைஎல்லாம் நுகர்ந்து தமக்கும், பிறர்க்கும் நிலைத்த பயன் விளைவதற்குரிய நற்காரியங்கள் செய்து, உலகத்திலுள்ள குழப்பங்களும், துன்பங்களும் நீங்க, மகிழ்ச்சியும், புகழும் பெறத் தியானம் செய்ய வேண்டும்.

தியான நிலையில் பெரிய விஞ்ஞானக் கருத்து ஒரு மின்னல் போலத் தோன்றுகிறது . இந்தத் தியான முறையிலே தான், இந்நாளில் எல்லா விஞ்ஞான விநோதங்களும் கண்டுபிடிக்கப்படுகின்றன.

தியானம் செய்வதால், மனம் ஆற்றல் மிக்கதாக இருக்கிறது. செயல் வேகம் மிகுந்ததாக இருக்கும். சாமானிய மக்களால் சிந்திக்கக் கூட இயலாத அரும்பெருஞ் சாதனைகளை ஆற்றுகின்ற வல்லமை கிடைக்கத் தியானம் உதவிடுகிறது.

மறதியை விளக்க தியானம் வேண்டும். மனம் சக்தி பெற சாப்பாடு தியானம்தான். காதலிலும், குடும்ப வாழ்விலும், தொழிலும், பொது வாழ்விலும் இடிவிழுந்து நசுங்கிய உங்கள் இதயத்து வலி நீங்கத் தியானம் வேண்டும். விண்ணில் சுழலும் விசித்திர உண்மைகளை, அதிசயங்களைக் கண்டு ஞானம் பெற, நாம் ஏறிப் பறக்க தேவைப்படும் ஊர்தியே தியானம்.

சொந்த வாழ்வில் மேம்பட்ட நிலையை எய்துவதுடன், சமுதாய ரீதியிலும் உலகியல் ரீதியிலும், மனித குலத்திற்கு எத்தனையோ நன்மைகளைச் செய்து, தொண்டாற்றி இன்பமுற தியானம் உதவுகிறது.

முடிவாக நல்ல உடல் நலம், மன நலம், நீளாயுள், நிறை செல்வம், உயர்புகழ், மெய்ஞானம் பெற்றுப் பேரின்ப வாழ்வு வாழ தியானம் செய்ய வேண்டும்.

நன்றி : பானுகுமார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கேள்வி கேட்டால் கோபம் வருகிறதா? ...

கேள்வி கேட்டால் கோபம் வருகிறதா? திமுக மீது அண்ணாமலை விமர்சனம் 'கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து ...

டில்லியில் அனைத்து துறை வளர்ச் ...

டில்லியில் அனைத்து துறை வளர்ச்சியையும் உறுதிபடுத்துவோம் – பிரதமர் மோடி டில்லியில் பா.ஜ., ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், 'வரலாற்று சிறப்புமிக்க ...

உத்திர பிரதேச மாநிலத்தில் பாஜக ...

உத்திர பிரதேச மாநிலத்தில் பாஜக முன்னிலை உத்தர பிரதேசத்தில் மில்கிபூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், 3ம் ...

டில்லியில் ஆட்சியை கைப்பற்றிய ...

டில்லியில் ஆட்சியை கைப்பற்றிய பாஜக டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ., ஆட்சியை ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வா ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது ? அண்ணாமலை கேள்வி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்க ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை ''இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், ...

மருத்துவ செய்திகள்

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...